வஞ்சப்புகழ்ச்சி

சொன்னாள் நன்றி
ஆகிவிட்டேன் நான்
மூன்றாம் மனிதனாய் ..

------------------------------------------------------

முரண்

மாறுவேடப் போட்டியில்
பயத்தோடு பாடுகிறது குழந்தை
'அச்சமில்லை அச்சமில்லையென்று'

-----------------------------------------------------

வழிமாறும் பயணங்கள்

கல்லூரியில் ஆரம்பித்து
கல்யாணத்தில் முடிகிறது
சிலரின் காதலும்
பலரின் நட்பும்

-------------------------------------------------

Maintenance Project

ஓட்டை டயரில்
ஒட்டும் பஞ்சரில்
ஓடுகிறது வாழ்க்கை

-------------------------------------------------------

நிதர்சனம்


எப்போதாவது பேசிவிட மாட்டாளா
என அவன்
எங்கே பேசிவிடுவானோ
என அவள்
தொடர்கிறது நட்பு
முகப்புத்தகத்தில்.



Read more ...
டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும்   சில   பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
இதுவரை 
பாகம் 7

இனி ...

மறுநாள் ஜெஸ்ஸியின் வருகைக்காக காத்திருந்தேன். அவளுக்குப் பிடித்த வெள்ளை சுடிதாரில் வந்திருந்தாள். முதல் சந்திப்பு ஞாபகம் வந்தது. அப்பொழுதும் அதே வெள்ளை உடை. ஆனந்தமாக உணர்ந்தான் கார்த்தி. ஆனால் அவளது நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எப்பொழுதும் போலப் பேசினாள்.


ஒருவேளை மெஸேஜ் டெலிவர் ஆகாமல் போய் இருக்குமோ ? இல்லை மெஸேஜ் பார்க்க மறந்து இருப்பாளோ ? இல்லை வேண்டுமென்றே கிண்டல் செய்கிறாளா ? தலை வெடித்து விடும் போல் இருந்தது.

"மெஸேஜ் பார்த்தாயா ஜெஸ்ஸி ? " - நேரடியாக கேட்டே விட்டான்.

"எந்த மெஸேஜ் ?" - நக்கலோடு கேட்டாள்.

"நேத்து நைட் என்னோட நம்பர்ல இருந்து எந்த மெஸேஜும் வரலையா உனக்கு ?"

"ஓஹ்ஹ் .. அதுவா .. பார்த்தேன் பார்த்தேன் .. கொஞ்சம் இடம் கொடுத்தால் போதுமே, ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டியது .. " - முறைத்தாள்.

ஜெஸ்ஸி அப்படி சொல்லுவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. முகத்தில் அறைந்தார் போல் இருந்தது. கொஞ்சம் யோசித்து அனுப்பி இருக்கலாமோ என்று எண்ணினான்.


"ஸாரி ஜெஸ்ஸி. தப்பா எதுவும் நினைக்கலையே ?"

"இதுல என்ன இருக்கு. நடக்கறது தான. இதுக்கு போய் ஸாரி எல்லாம் சொல்லிகிட்டு. ஃப்ரென்ட்ஸ்க்குள்ள ஸாரி எல்லாம் சொல்ல கூடாது" - கண் சிமிட்டினாள்.

காதலை கண்ணியதோடு நிராகரித்து நட்பு பாராட்டிய விதம் அவனை வெட்கித் தலைகுனிய வைத்தது. ச்சே .. அவசரப்பட்டு விட்டோமே என்று வருந்தினான். உன்னை கட்டிக்க போறவன் கொடுத்து வச்சவன் ஜெஸ்ஸி என்று நினைத்துக்கொண்டான்.

வருடங்கள் ஓடின. வேளை, ப்ரோமோசன், ஆன்சைட், அது, இது என்று வாழ்க்கை மாறியது. எனக்கும் ஜெஸ்ஸிக்கும் இடையேயான நட்பும் தொடர்ந்தது.  இதோ இன்று அவளுக்குத் திருமணம். பழைய நினைவுகளை முதல் பாகத்தில் இருந்து அசை போட்டபடி தூக்கம் வராமல் மண்டபத்தில் வெளியே உலவ ஆரம்பித்தேன்.

ஜெஸ்ஸி மணமகள் அறையிலிருந்து என்னை பார்த்தாள். அலங்கார வேலைகள் நடந்து கொண்டிருந்தது. என்னை வருமாறு கை அசைத்தாள்.

"என்னடா கார்த்தி .. தூங்கலையா நீ ?"

"தூக்கம் வரல"

"ஏன்டா சோகமா இருக்க? "

"அதெல்லாம் ஒன்னும் இல்லயே" .. சோகத்தை மறைக்க முயற்சி செய்தான்.

"உதைப்பேன். உன்னை பத்தி எனக்கு தெரியாதா. என்ன விசயம்னு சொல்லு".

"பெருசா எதுவும் இல்லை. இத்தனை நாள் கூடவே இருந்த. கல்யாணத்துக்கு அப்பறம் அதெல்லாம் எதிர் பார்க்க முடியாது. பொலம்பரத்துக்கும் ஆள் இருக்காது. அதான் பீலிங்க்ஸ்."


"இவ்வளோ தானா .. நீயும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ"

"நீ வேற. நமக்கு யாரு பொண்ணு தர போறா."

"உனக்கு என்னடா குறைச்சல். உன்னை கட்டிக்க கொடுத்து வச்சு இருக்கணும். நீ மட்டும் காலேஜ்ல ப்ரொபோஸ் பண்ணி இருந்தால், நான் ஓகே சொல்லி இருப்பேன்."  - சொல்லி விட்டு சிரித்தாள்.

அதிர்ந்தான் கார்த்தி. அதான் உன்னோட பிறந்த நாள் அன்றைக்கு மெஸேஜ் அனுப்பினேனே "I Love You".

"எப்போ பார்த்தாலும் கலாய்ச்சுக்கிட்டே இரு.  அன்னைக்கு மட்டும் உன்னோட மொபைல்ல இருந்து 20 மெஸேஜ் 15 மிஸ்ட் கால்ஸ் வந்துச்சு. விட்டா எல்லாத்தயும் லவ் பண்ண சொல்லுவ போல இருக்கே" .. மீண்டும் சிரித்தாள்.

உடைந்தே போனேன். பாழாய்ப்போன "I Love You" விளையாட்டு என் மொபைலில் அன்று நடந்தேறி இருக்கிறது. விளையாட்டு வினை ஆனதை அன்றைக்குத் தான் உணர்ந்தேன். ஜெஸ்ஸிக்கு இனிமேல் நடந்த விசயத்தை கூறி ஒன்றும் ஆகப்போறதில்லை. வெள்ளம் தலைக்கு மேல் எப்பவோ போயாயிற்று. வந்த ஆத்திரத்திற்கு ரூமில் தூங்கி கொண்டிருக்கும் ஜெய்யை போட்டு மிதிக்க வேண்டும் போல் இருந்தது.

ஜெய் ஏற்கனவே எழுந்திருந்தான்.

"என்ன மச்சி. உன் ஆளோட கல்யாணத்துக்கு முதல் ஆள கிளம்பி ரெடீ ஆயிட்ட போலிருக்கு. நேத்து நைட் தான் KTVல பூவே உனக்காக படம் போட்டாங்க. நீ ஏன்டா திருப்பி போட்டு காட்ற"

"உன் மேல செம கொலை வெறில இருக்கேன்.. ஓடிரு"

"ஒய் மச்சி .. எனி ப்ரோப்ளம் ? "


"நீ அனுப்பின மெஸேஜ்னால தாண்டா ஜெஸ்ஸி எனக்கு கிடைக்கல"

"எந்த மெஸேஜ் மச்சி ?"

"அவ பர்த்‌டே அன்னைக்கு நீ என்னோட மொபைல்ல இருந்து எதுவும் அனுப்பல ?"

"ஓஹ்ஹ் அதுவா.. நான் அப்போவே சொன்னேன் மச்சி , வெறும் மிஸ்ட் கால் மட்டும் கொடுக்கலாம்னு .. இந்த விக்கி பையன் தான் மெஸேஜ் அனுப்பிச்சான்"

தனக்கும் அதற்க்கும் எந்த ஒரு சம்பந்தம் இல்லை என்பதை போல் பார்த்தான் விக்கி.

"சரி விடு .. எல்லாம் கை மீறி போய்டுச்சு. இனிமேல் பேசி என்ன பிரயோஜனம்." கோபத்தை ஒருவராக அடக்கிக்கொண்டேன்.

"கோவிச்சுக்கிட்டியா மச்சி" - ஜெய் பாசமாகக்  கேட்டான்.

மௌனமாய் தலை ஆட்டினேன்.

"கோவிச்சுக்கோ கோவிச்சுக்கோ" - கலாய்த்து சிரித்தான்.

"உங்களை மாதிரி 4 பேர் இருக்கறதால தாண்டா நம்ம கிளாஸ்ல ஒரு லவ்வும் சக்ஸஸ் ஆக மாட்டேங்குது." சொல்லிக்கொண்டே ஜெய் மீது பாய்ந்தேன். பின்னாடியே அனைத்து கும்பலும் பொதுமாத்து போட பாய்ந்தது.

*******************************முற்றும் ************************************


சமர்ப்பணம்:- 

நன்றிகள்:-
  • என்னுள் எழுதும் ஆர்வத்தை விதைத்த Sarcasan மற்றும் கீதா.
  • பதிவுகளாக எழுதி வந்த எனக்கு சிறுகதை வடிவத்தை அறிமுகம் செய்து வைத்த GS.
  • அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாத நினைவுகளை கொடுத்த கல்லூரி நண்பர்கள்.
  • மெகா சீரியலுக்கு போட்டியாக ஒரு வருடம் எழுதாமல் இருந்த போதிலும், அடிக்கடி விசாரித்த நல்ல உள்ளங்கள். 
  • இறுதியாக எவ்வளோ கேவலமாக எழுதினாலும் அதையும் படித்து உற்சாகப்படுத்தும் "அந்த நாலு பேர்".
Read more ...
டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும்   சில   பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
இதுவரை 
6. Karthik talks to Jessi
இனி .. கிளாஸ்ரூம் வெறிச்சோடி கிடந்தது... "பர்ஸ்ட் பீரியட் ப்ரீ போல .. ஒருத்தனும்  சொல்லலியே  .. அப்போ கேன்டீன் தான் போய் இருப்பானுங்க ..  எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்குவோம்..".. கிளாஸ் ரெப் பாலாஜிக்கு கால்  அடித்தான் ..

"எங்கடா இருக்கீங்க?"

"டேய் .. சீக்கிரம் டிபார்ட்மென்ட் செமினார் ஹால்க்கு வந்துடு.." -பாலாஜி

"எதுக்குடா ? போன வாரம் லேப் ப்ரோக்ராம்க்கு அவுட்புட் காட்டவா ?? "

" அதுக்கு இன்னும் M.E ஸ்டாஃப் யாரையும் உஷார் பண்ணல.. இது HOD வர சொல்லி  இருக்காங்க .. என்ன மேட்டர்ன்னு தெரில"

"மச்சி பேசாம எனக்கு ப்ராக்ஸி போட்டுடு"

"டேய் .. ஏற்கனவே ஜெய்க்கு வேற போடணும் .. தாங்காது .. சீக்கிரம் வந்து சேரு .."

பின் கதவு வழியாக சென்று கடைசி வரிசையில் அமர்ந்தான் கார்த்தி. "செமஸ்டர் எக்ஸாம்ஸ் எல்லாரும் எப்படி பண்ணி இருந்தீங்க ?" என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார் HOD. விஷயம் விளங்கிவிட்டது. செமஸ்டர் ரிசல்ட்ஸ். "ஒருத்தரும் படிக்கணும், பாஸ் ஆகணும் அப்படிங்கிற எண்ணத்துல வர்ற மாதிரி தெரியல. "Data Structures"ல  பாதி க்ளாஸ் காலி. இந்த லட்சணத்துல I.V ஒண்ணுதான் உங்களுக்கு குறைச்சல். எல்லாரும் படிச்சு 80% மேல வாங்குங்க, அதுக்கு அப்பறம் I.V போறத பத்தி யோசிக்கலாம். "


தனது தலைமையில் நடக்கவிருந்த முதல் I.V கலைந்து போனதை எண்ணி ஷராஃபத் வருந்திக்கொண்டிருக்க, 90% வாங்கிய ரஞ்சனி 83% வாங்கியதற்காக திட்டு வாங்கிக்கொண்டிருக்க, கார்த்தி தான் பெயில் ஆனதை பற்றி கவலை கொள்ளாமல், ஜெஸ்ஸிக்கு ஸீக்ரெட் ஃப்ரென்ட் கிப்ட் தர முடியவில்லையேயென ஆதங்கப்பட்டுக்கொண்டான்.

HOD தொடர்ந்தார். "இனிமேல் எல்லாருக்கும் ஈவ்னிங் 4 - 6 டிபார்ட்மெண்ட் லேப்ல 'ஸ்டடி ஹவர்ஸ்'. படிச்சத குரூப் லீடர் கிட்ட ஒப்பிசுட்டு தான் கிளம்பணும். பாலாஜி, குரூப் லிஸ்ட் ரெடி பண்ணி என்னோட டெஸ்க்ல வச்சுடு.  பசங்களுக்கு பொண்ணுங்களையும் பொண்ணுங்களுக்கு பசங்களையும் லீடரா போடு .. அப்போதான் ஏமாத்தமா ஒழுக்கமா படிப்பீங்க .. " .

பாலாஜி வழக்கம் போல ரோல் நம்பர் வரிசையில் குரூப் பிரிக்க, இம்முறையும் ஜெஸ்ஸி  தலைமையிலான குரூப்பில் கார்த்தி அண்ட் ஜெய்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

கடமையே என்று சிலர் , படிக்கும் சாக்கில் கடலையென சிலர் , வேண்டா வெறுப்பாக பலர் என்று சர்க்யூட் லேபில் க்ரூப் ஸ்டடி ஆரம்பம் ஆனது.

"ஜெஸ்ஸி நல்லா புரியர மாதிரி சூப்பரா சொல்லித்தரா இல்ல  .. மேடம் நடத்தும் போது ஒரு எழவும் விளங்கல"

"எப்படிடா விளங்கும் .. பாடத்த கவனிச்சாதான .. பாக்கறது பூரா அவள .. " - ஜெய் அலுத்துக்கொண்டான்.

"தம்பி, நீங்க மேடம பாக்கறதுக்கு நாங்க பாக்கறது எவளவோ தேவல"

"என்ன சொல்றாரு உங்க ல்ப லீடர்" - ஜெஸ்ஸி.

"நீ அவனைவிட நல்லா சொல்லித்தறியாம்.  தலைவர் சொல்றாரு" - நக்கலாய் சிரித்தான் கார்த்தி.

"அவரு பெரிய படிப்ஸ். படிக்காமலேயே பாஸ் பண்றவர். அதுவும் அவர் Tunneling சொல்லிகொடுத்த மாதிரியெல்லாம் எனக்கு நடத்தவே தெரியாது. அவரு முன்னாடியெல்லாம் நான் சும்மா". சொல்லிவிட்டு அவளும் சிரித்தாள்.


அவள் சிரிப்பில் ஆசிர்வதிக்கப்பட்டவனாய் உணர்ந்தான் கார்த்தி. ஜெய்யோ கார்த்தி போடும் கடலை கருகாமல் இருப்பதற்குத் தன்னை மணலாக உபயோகிப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்தான்.

"இப்படி படிக்காம பேசிட்டே இருந்த இந்த தடவையும் நீ பாஸ் ஆக மாட்ட கார்த்தி."

"பார்த்துட்டே இரு ஜெஸ்ஸி .. இந்த தடவ ஃபர்ஸ்ட் மார்க் வாங்கறேனா இல்லையானு."

அதை கேட்டவுடன் ஜெய்க்கு சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது .. ஜெஸ்ஸியும் உடன் சேர்ந்து சிரித்தாள்.

"என்ன மச்சான் இப்படி சிரிச்சு அசிங்கப்படுத்துற .. சிங்கள் பாஸ் அஸெம்ப்லர் ஒப்பிக்கவா ? பாக்கறியா ?"

"உனக்கு எவளோ சொல்லிக் கொடுத்தாலும் புரியாதுங்கற விஷயம் தெரிஞ்சும் அவ வெட்கமே இல்லாம சிரிக்கிறா. இதுல ஸார் ஃபர்ஸ்ட் மார்க் வேற வாங்க போறீங்க .. ஆல் தி பெஸ்ட்."

ஜெஸ்ஸியை இம்ப்ரெஸ் செய்வதற்கு இதை விட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. அதற்காகவே வெறித்தனமாக படித்தான் கார்த்தி. அனைவரும் எதிர்பார்த்தது போல் பாஸ் மட்டுமே ஆக முடிந்தது. தியரீ ஆஃப் கம்ப்யூடேசன் உட்பட 4 சப்ஜக்டில் பார்டர் பாஸ். ஜெஸ்ஸியின் பெயர் இரண்டாவது இடத்தில் இருந்தது.. முதலாவது மார்க் சாட்சாத் ஜெய். இட் வாஸ்  எ மெடிகல் மிராக்கிள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

"பாஸ் ஆயிட்டோம்ல" - மெஸேஜ் தட்டினான்.

"ஹேய் .. சூப்பர் .. வாழ்த்துக்கள். ஃபர்ஸ்ட் மார்க் வாங்கறதா சொன்னீங்க?".

"இப்போ தான பாஸ் ஆக ஆரம்பிச்சு இருக்கோம். அடுத்த ஸெமெஸ்டர்ல வாங்கிடுவோம்"

"ஹி ஹி ஹி ... அது சரி .. பாஸ் ஆனதுக்கு ட்ரீட்?"

"குடுத்துட்டா போச்சு .. நாளைக்கு .. ஆல் சீசன்ஸ் .. 12.30 ஷார்ப்.. வந்துடு" .. ரீசார்ஜ் செய்தது போக ஜெய்க்கு தரவேண்டிய மீதம் 100 ரூபாய்யை பர்சில் பத்திரப்படுத்தினான்.

ட்ரீட் குடுக்கற மேட்டர சொன்னா ரொம்ப கலாய்பானுங்க. இவனுங்களையும் கூட்டிட்டு போலாம்னு பார்த்தா காசும் இல்ல. அப்படியே இருந்தாலும் அங்க வந்து நம்மள ப்ரீயா பேச விட மாட்டானுங்க. இத்தகைய சிந்தைனைகள் தோன்ற சீக்கிரமா எழும்பி கிளம்பினான். காதல் வந்தால் அனைத்தும் தலைகீழ் தான்.11 மணிக்கு கல்லூரிக்குப் போகும் கார்த்தி இன்றோ 12.15 மணிக்கெல்லாம் ஆல் சீசன்ஸ் வாசலில்.காத்திருந்த காலம் எல்லாம் செல்போன் வருகைக்கு பின்னர் காணாமல் போனது. "wru" மெஸேஜ் பறந்தது. 5 நிமிடத்தில் ஜெஸ்ஸியும் வந்து சேர்ந்தாள்.

ஆல் சீசன்ஸ் காஸ்ட்லீ ஹோட்டல் என்பதால் கூட்டம் ஜாஸ்தி இருப்பதில்லை. ட்ரீட் கொடுக்க வரும் கும்பல் தான் சற்று அதிகம். ஒரு இடம் தேடி அமர்ந்தார்கள்.

"எனக்கு என்ன கார்த்தி வாங்கி தர?"

"என்கிட்ட இருக்கற 100 ரூபாய்க்கு 2 மீல்ஸ் தான் சாப்பிட முடியும்"

"ஹி ஹி .. ஹ்யூமரஸ் .. இது தான் உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு"

"அப்படியா.. அப்போ அந்த 100 ரூபாய்யும் என்னோடது இல்ல. ஜெய்யோடது"

"ஹி ஹி ஹி ஹி .. வெரி funny .."

கார்த்தி அடித்த மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரித்தாள். அவள் உண்மையாகவே ரசிக்கிறாளா அல்லது நடிக்கிறாளா .. புரிந்துகொள்ள முயற்சி செய்வது வீண் வேலையென்று தோன்றியது. இதே ஜோக்கை ஒருமுறை ஜெய்யிடம் சொல்லி அடி வாங்கியது நினைவில் வந்து மறைந்தது.

சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து பேசிக்கொண்டிருக்கையில் செல்போன் ஒலித்தது.

ஜெய் காலிங்க்.

"சொல்றா"

"எங்க மச்சான் இருக்க?"

கழுகுக்கு மூக்கு அதுக்குள்ளயும் வேர்த்துடுச்சு. "RS புறம்ல." ஜெஸ்ஸிக்கு கேட்காதவறு. வெங்கடாபுரத்தில் இருந்துகொண்டு.

"அப்படியா. அங்கயே இரு. நாங்களும் அங்க தான் வர்றோம். போர் போர்ன் ஐஸ் க்ரீம் கூப்பன் ஓசி கிடைச்சு இருக்கு"

"இல்ல மச்சான். நான் அங்க இருந்து சாய்பாபா காலனி கிட்ட வந்துட்டேன். SBI ATM கிட்ட இருக்கேன். நீங்க போய்ட்டு வாங்க." சமாளித்தான்.

"அப்படியா. நாங்களும் அங்க தான் இருக்கோம்.  கொஞ்சம் ரோட்டுக்கு இந்த பக்கம் பாரு. "


ஜெய்யும் விக்கியும் நக்கலாய் சிரித்து கொண்டிருந்தார்கள். கையும் களவுமாக மாட்டிக்கொண்டதை எண்ணி கூச்சப்பட்டான் கார்த்தி.

"சரி சரி .. வழியாத .. நீ நடத்து" .. போனை கட் செய்தான்.

"பாசமா விட்டுட்டு போறான். நல்லததுக்கா கெட்டதுக்கான்னு தெரியலயே. சமாளிப்போம்".

-------------------------------------------------------------------------------------------------------------------------

"என்னடா நடக்குது உங்களுக்குள்ள".. சாயங்காலம் ஹாஸ்டலில் தூண்டில் போட்டான் ஜெய்.

"ஒன்னும் இல்ல மச்சி .. பாஸ் ஆனதுக்கு ட்ரீட் கேட்டா .. கொடுத்தேன் .. அவளோதான். "

"ஏன்டா !@#$. எக்ஸாம்க்கு முன்னாடி படிச்சு கதை சொன்னது நானு. ட்ரீட் மட்டும் அவளுக்கா .. !@#!@$!@$@!"

"விட்றா விட்றா .. ட்ரீட் தான வச்சுட்டா போச்சு"

அடுத்த மாதம் திருப்பி தருவதாய் கூறி ஜெய் செலவில் அன்று இரவே சரக்கு ட்ரீட் ஏற்பாடு செய்தான். சில பல ரவுண்டுகள் உள்ளே சென்றதில் "மச்சி .. உனக்கு அவள எவ்வளோ புடிக்கும்" என்று ஜெய் கேட்க போதையில் அவனும் "இவ்வளோளோளோளோளோ" என்று உளறி மாட்டிக்கொண்டான்.

"அதான் புடிச்சு இருக்குல. போய் சொல்ல வேண்டிதான"

"லவ் எல்லாம் இல்லடா .. வெறும் நட்பு மட்டும் தான்". ஆனா வேலை கிடைச்ச உடனே சொல்லிடுவேன் மச்சி என்று மனதிற்குள் கூறிக்கொண்டான்.

அன்றிலிருந்து அவள் வரும்போதெல்லாம் இதை சொல்லி கிண்டல் செய்வது வழக்கமான ஒன்றானது. இவ்வாறாக ஜாலியாக போய்க்கொண்டிருந்த ஸ்டடி ஹவர்சில் எவனோ ஒரு !@#!$! 1.5GB RAM ஆசைப்பட்டு திருடியதில், "நீங்க படிச்சு கிழிச்சது போதும்" என்று ஸ்டடி ஹவர்ஸ் முடிவுக்கு வந்தது. இந்த செய்தி கார்த்தி மட்டுமல்லாது ஸ்டடி ஹவர்சில் கடலை வருத்த பலருக்கும் வருத்தத்தை தந்தது.


-----------------------------------------------------------------------------------------------------------------------

ஜெஸ்ஸிக்கு முதல் கம்பெனியிலேயே வேலை கிடைத்தது. கார்த்தி முதலில் வந்த ஓரிரண்டு கம்பெனிகளை தவறவிட்டாலும் ஒருவழியாக முட்டிமோதி மூன்றாவதில் வேலை கிடைத்தது. வேலையில்லாத சமயங்களில் ஜெஸ்ஸி மிகவும் ஆறுதல் கூறி தெம்பு ஊட்டினாள்.  உற்சாகப்படுத்தினாள். அவர்களுக்குள் இருந்த நெருக்கம் இன்னும் அதிகமானது. காதலை சொல்ல தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அடுத்த வாரத்தில் ஜெஸ்ஸியின் பிறந்தநாள் வருவது நினைவில் வந்தது. காதலை பரிசாக கொடுக்க இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது.


காத்திருந்த நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. 11.30. அரை மணி நேர காத்திருப்பு. காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து காத்திருத்தல் சுகமான ஒன்றாகவே தெரிந்தது. கவித்துவமாக காதலை சொல்லி ஆச்சரியப்படுத்த வேண்டும். மூளையை கசக்கி எழுதிக்கொண்டிருக்கையில் செல்போன் அழைத்தது - "JAI DAD CALLING".  சுவாரசியமாக பக்கத்து ரூமில் மொக்கை போட்டுக்கொண்டிருந்த அவனிடம் கொடுத்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து எழுத்த ஆரம்பித்தான்.

எழுதி முடிக்கையில் மணி 12.05 கடந்திருந்தது. போன் செய்து விஷயத்தை சொல்ல வெட்கமாக இருந்தது. மெஸேஜ் தான் சிறந்தது என்று முடிவு செய்து பக்கத்து ரூமிலிருந்த ஜெய்யிடம் போனை வாங்கி வந்து பொறுமையாக டைப் அடித்தான். ஒரு வேலை ஃபார்வர்ட் மெஸேஜ்ன்னு நெனச்சு டெலீட் பண்ணிட்டா என்ன பண்றது ? யோசித்தான். கவிதையை நாளை நேரில் வாசித்து அசத்திவிடலாம். இப்போதைக்கு அளவாக "I love you" மட்டும் அனுப்பினான். ஒரு பதிலும் இல்லை. போன் பண்ணலாம் என்றால் வெட்கம் இடைமறித்து.

உதிக்கின்ற சூரியன் உறங்கும் வேலையில், உங்கள் இல்லம் தேடி வரும் இனிய இரவு வணக்கங்களுடன் நான் உங்கள் லக்ஷ்மி நாராயணன். சூரியன் F.M இல் அடுத்து வரும் பாடல் இசைஞானி இளையராஜா மெல்லிசையில் "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா"

எப்படியும் பதில் வரும் என்னும் நம்பிக்கையில் இளையராஜா இசையோடு தூங்கிப்போனான்.

Read more ...

அல்லும் பகலும்
வேலையை தவிர்த்து
வேறேதும் செய்யாது,
வீட்டிற்கும் அலுவலகத்திற்கும்

செக்குபோல் சுழலும்
வாலிப வாழ்கையின்
வசந்தமற்ற மற்றுமொரு
வழக்கமான மாலைபொழுதினில்

கதிரவன் கரைய
கார்முகில் வாய்பிளந்து
பொழிகிறது வான்
ஜன்னலோரம் நான்.

முகத்தில் அடித்தது
மழையின் சாரல்கள்
மனதை நனைத்தது
ஞாபகத் தூறல்கள்.

அனுதினமும் முகநூலில்
அளவளாவும் அன்பர்,
பின்னிரவு தாண்டியும்
அலைபேசும் நண்பரென

சுற்றமும் சூழலும்
தன்னிலை மறந்து
தத்தம் காதலியிடம்
நித்தம் கதைக்க,

நானோ தனியாக
தனிமைக்குத் துணையாக
உன்வரவை எதிர்நோக்கி
மௌனமாய் காத்திருக்க ...

காதலிக்காக கால்வலிக்க
காத்திருப்பது சுகமெனில்
காதலுக்காக காத்திருப்பது
அதனினும் சுகம்தானே ...

அடக்கத்திலும் அன்பிலும்
அத்தை மகளென,
பாசத்திலும் பண்பிலும்
பால்ய சிநேகிதியென,

கனிவிலும் கண்டிப்பிலும்
கல்லூரித் தோழியென,
அழகிலும் அறிவிலும்
அலுவலக நண்பியென

பரிட்சயமான முகங்களில்
அவ்வப்பொழுது தென்பட்டு
நீதானோ என்னவளென்று
முடிவெடுக்கும் முன்னரே
மறைந்துபோகும் உன்னை

என்றாவது சந்திப்பேன்
என்னும் நம்பிக்கையில்
நிதமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
கவிதையிலும் கற்பனையிலும் ...

~பிரேம்

Read more ...
என்றாவது ஒரு நாள் நல்ல கவிதை எழுதி விடுவேன் என்ற முயற்சியில் ...

என் ப்ளாக்ஐ வாழ வைத்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் .. ஹாப்பி பிரன்ட்ஷிப் டே டு யு ஆல்.



ஏய் கோபமே,
அன்று அண்ணன்
புது சட்டையை உடுத்தியபொழுது,
பீறிட்டுக்கொண்டு வந்த நீ,
இன்று பலபேர் கை மாறி
என்னிடம் வந்திருக்கும்
 எனது சட்டையை கண்டும்,
ஏன் வர மறுக்கிறாய் ??

---------------------------------------------------------------------------------------------------

கையிலிருந்த பத்து ரூபாய்க்கு
அம்பாள் மெஸ்ஸில்
மூன்று தோசையா ??
அல்லது MS பேக்கரியில்
ஒரு காபி, ஒரு டைகர் பிஸ்கட் பாக்கெட்டா ??
யோசித்துக் கொண்டிருந்தவன் எதிரில் 
வந்த எங்களை கண்டதும்,
சொன்னான்
"அண்ணே மூணு டீ" !!!!
------------------------------------------------------------------------------------------------------

நண்பன் வீட்டில்
நடந்த விருந்தில்
அன்னை அழைக்கையில்
ஞாபகம் வந்தது
'மாம்ஸ்'இன் இயற்பெயர்
வினோத் என்பது ...
----------------------------------------------------------------------------------------------------

மூன்றாவது முறையாக
அலுக்காமல் சளைக்காமல்
DBMS படித்துக்கொண்டிருக்கிறான் - அவன்
என் Arrearsக்காக ..
----------------------------------------------------------------------------------------------------

KFC பக்கெட் சிக்கன்,
Mc Donald's பர்கர்,
Fast Track வாட்ச்,
Peter England ஷர்ட்,
Levi ஜீன்ஸ்,
Reebok டி-ஷர்ட்,
Nike ஷு,
PVR Cinemas பர்ஸ்ட் ஷோ,
Barbeque nation டீம் லஞ்ச் ,
Weekend அவுடிங்,
வாழ்க்கைத்தரம் மாறிவிட்டாலும்
மனம் ஏங்குகிறது,

அந்த ஐந்து ருபாய்
தேங்காய் BUNநிற்கும்,
அதையும் பிடுங்கித் தின்ற
அந்த நட்பிற்கும் !!!!
-----------------------------------------------------------------------------------------------------------

~பிரேம்.
Read more ...