டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும்   சில   பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
இதுவரை 
பாகம் 7

இனி ...

மறுநாள் ஜெஸ்ஸியின் வருகைக்காக காத்திருந்தேன். அவளுக்குப் பிடித்த வெள்ளை சுடிதாரில் வந்திருந்தாள். முதல் சந்திப்பு ஞாபகம் வந்தது. அப்பொழுதும் அதே வெள்ளை உடை. ஆனந்தமாக உணர்ந்தான் கார்த்தி. ஆனால் அவளது நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எப்பொழுதும் போலப் பேசினாள்.


ஒருவேளை மெஸேஜ் டெலிவர் ஆகாமல் போய் இருக்குமோ ? இல்லை மெஸேஜ் பார்க்க மறந்து இருப்பாளோ ? இல்லை வேண்டுமென்றே கிண்டல் செய்கிறாளா ? தலை வெடித்து விடும் போல் இருந்தது.

"மெஸேஜ் பார்த்தாயா ஜெஸ்ஸி ? " - நேரடியாக கேட்டே விட்டான்.

"எந்த மெஸேஜ் ?" - நக்கலோடு கேட்டாள்.

"நேத்து நைட் என்னோட நம்பர்ல இருந்து எந்த மெஸேஜும் வரலையா உனக்கு ?"

"ஓஹ்ஹ் .. அதுவா .. பார்த்தேன் பார்த்தேன் .. கொஞ்சம் இடம் கொடுத்தால் போதுமே, ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டியது .. " - முறைத்தாள்.

ஜெஸ்ஸி அப்படி சொல்லுவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. முகத்தில் அறைந்தார் போல் இருந்தது. கொஞ்சம் யோசித்து அனுப்பி இருக்கலாமோ என்று எண்ணினான்.


"ஸாரி ஜெஸ்ஸி. தப்பா எதுவும் நினைக்கலையே ?"

"இதுல என்ன இருக்கு. நடக்கறது தான. இதுக்கு போய் ஸாரி எல்லாம் சொல்லிகிட்டு. ஃப்ரென்ட்ஸ்க்குள்ள ஸாரி எல்லாம் சொல்ல கூடாது" - கண் சிமிட்டினாள்.

காதலை கண்ணியதோடு நிராகரித்து நட்பு பாராட்டிய விதம் அவனை வெட்கித் தலைகுனிய வைத்தது. ச்சே .. அவசரப்பட்டு விட்டோமே என்று வருந்தினான். உன்னை கட்டிக்க போறவன் கொடுத்து வச்சவன் ஜெஸ்ஸி என்று நினைத்துக்கொண்டான்.

வருடங்கள் ஓடின. வேளை, ப்ரோமோசன், ஆன்சைட், அது, இது என்று வாழ்க்கை மாறியது. எனக்கும் ஜெஸ்ஸிக்கும் இடையேயான நட்பும் தொடர்ந்தது.  இதோ இன்று அவளுக்குத் திருமணம். பழைய நினைவுகளை முதல் பாகத்தில் இருந்து அசை போட்டபடி தூக்கம் வராமல் மண்டபத்தில் வெளியே உலவ ஆரம்பித்தேன்.

ஜெஸ்ஸி மணமகள் அறையிலிருந்து என்னை பார்த்தாள். அலங்கார வேலைகள் நடந்து கொண்டிருந்தது. என்னை வருமாறு கை அசைத்தாள்.

"என்னடா கார்த்தி .. தூங்கலையா நீ ?"

"தூக்கம் வரல"

"ஏன்டா சோகமா இருக்க? "

"அதெல்லாம் ஒன்னும் இல்லயே" .. சோகத்தை மறைக்க முயற்சி செய்தான்.

"உதைப்பேன். உன்னை பத்தி எனக்கு தெரியாதா. என்ன விசயம்னு சொல்லு".

"பெருசா எதுவும் இல்லை. இத்தனை நாள் கூடவே இருந்த. கல்யாணத்துக்கு அப்பறம் அதெல்லாம் எதிர் பார்க்க முடியாது. பொலம்பரத்துக்கும் ஆள் இருக்காது. அதான் பீலிங்க்ஸ்."


"இவ்வளோ தானா .. நீயும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ"

"நீ வேற. நமக்கு யாரு பொண்ணு தர போறா."

"உனக்கு என்னடா குறைச்சல். உன்னை கட்டிக்க கொடுத்து வச்சு இருக்கணும். நீ மட்டும் காலேஜ்ல ப்ரொபோஸ் பண்ணி இருந்தால், நான் ஓகே சொல்லி இருப்பேன்."  - சொல்லி விட்டு சிரித்தாள்.

அதிர்ந்தான் கார்த்தி. அதான் உன்னோட பிறந்த நாள் அன்றைக்கு மெஸேஜ் அனுப்பினேனே "I Love You".

"எப்போ பார்த்தாலும் கலாய்ச்சுக்கிட்டே இரு.  அன்னைக்கு மட்டும் உன்னோட மொபைல்ல இருந்து 20 மெஸேஜ் 15 மிஸ்ட் கால்ஸ் வந்துச்சு. விட்டா எல்லாத்தயும் லவ் பண்ண சொல்லுவ போல இருக்கே" .. மீண்டும் சிரித்தாள்.

உடைந்தே போனேன். பாழாய்ப்போன "I Love You" விளையாட்டு என் மொபைலில் அன்று நடந்தேறி இருக்கிறது. விளையாட்டு வினை ஆனதை அன்றைக்குத் தான் உணர்ந்தேன். ஜெஸ்ஸிக்கு இனிமேல் நடந்த விசயத்தை கூறி ஒன்றும் ஆகப்போறதில்லை. வெள்ளம் தலைக்கு மேல் எப்பவோ போயாயிற்று. வந்த ஆத்திரத்திற்கு ரூமில் தூங்கி கொண்டிருக்கும் ஜெய்யை போட்டு மிதிக்க வேண்டும் போல் இருந்தது.

ஜெய் ஏற்கனவே எழுந்திருந்தான்.

"என்ன மச்சி. உன் ஆளோட கல்யாணத்துக்கு முதல் ஆள கிளம்பி ரெடீ ஆயிட்ட போலிருக்கு. நேத்து நைட் தான் KTVல பூவே உனக்காக படம் போட்டாங்க. நீ ஏன்டா திருப்பி போட்டு காட்ற"

"உன் மேல செம கொலை வெறில இருக்கேன்.. ஓடிரு"

"ஒய் மச்சி .. எனி ப்ரோப்ளம் ? "


"நீ அனுப்பின மெஸேஜ்னால தாண்டா ஜெஸ்ஸி எனக்கு கிடைக்கல"

"எந்த மெஸேஜ் மச்சி ?"

"அவ பர்த்‌டே அன்னைக்கு நீ என்னோட மொபைல்ல இருந்து எதுவும் அனுப்பல ?"

"ஓஹ்ஹ் அதுவா.. நான் அப்போவே சொன்னேன் மச்சி , வெறும் மிஸ்ட் கால் மட்டும் கொடுக்கலாம்னு .. இந்த விக்கி பையன் தான் மெஸேஜ் அனுப்பிச்சான்"

தனக்கும் அதற்க்கும் எந்த ஒரு சம்பந்தம் இல்லை என்பதை போல் பார்த்தான் விக்கி.

"சரி விடு .. எல்லாம் கை மீறி போய்டுச்சு. இனிமேல் பேசி என்ன பிரயோஜனம்." கோபத்தை ஒருவராக அடக்கிக்கொண்டேன்.

"கோவிச்சுக்கிட்டியா மச்சி" - ஜெய் பாசமாகக்  கேட்டான்.

மௌனமாய் தலை ஆட்டினேன்.

"கோவிச்சுக்கோ கோவிச்சுக்கோ" - கலாய்த்து சிரித்தான்.

"உங்களை மாதிரி 4 பேர் இருக்கறதால தாண்டா நம்ம கிளாஸ்ல ஒரு லவ்வும் சக்ஸஸ் ஆக மாட்டேங்குது." சொல்லிக்கொண்டே ஜெய் மீது பாய்ந்தேன். பின்னாடியே அனைத்து கும்பலும் பொதுமாத்து போட பாய்ந்தது.

*******************************முற்றும் ************************************


சமர்ப்பணம்:- 

நன்றிகள்:-
  • என்னுள் எழுதும் ஆர்வத்தை விதைத்த Sarcasan மற்றும் கீதா.
  • பதிவுகளாக எழுதி வந்த எனக்கு சிறுகதை வடிவத்தை அறிமுகம் செய்து வைத்த GS.
  • அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாத நினைவுகளை கொடுத்த கல்லூரி நண்பர்கள்.
  • மெகா சீரியலுக்கு போட்டியாக ஒரு வருடம் எழுதாமல் இருந்த போதிலும், அடிக்கடி விசாரித்த நல்ல உள்ளங்கள். 
  • இறுதியாக எவ்வளோ கேவலமாக எழுதினாலும் அதையும் படித்து உற்சாகப்படுத்தும் "அந்த நாலு பேர்".
Read more ...