டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
 
இதுவரை ...

2.கார்த்திக் மீட்ஸ் ஜெஸ்ஸி

இனி ...


3. KARTHICK TALKS TO JESSI 

ஹாஸ்டல் முழுவதும் அன்னிக்கு ஜெஸ்ஸி பத்தின பேச்சுதான். ஒட்டு மொத்த டிபார்ட்மென்ட் பசங்களோட முழு ஆதரவோடு, ஒரு மனதா டாப் 10 தர வரிசைல ஒரு பொண்ணு முதல் இடம் பிடிக்கறது அநேகமா காலேஜ் வரலாறுல இது தான் முதல் முறை.

"எப்படி மச்சி ..  டாப் 10ல மொத ஆளு .. நம்ம டிபார்ட்மென்ட் பொண்ணு ..  மெக்கானிகல் பசங்க எல்லாம் I . Tயே எடுத்து இருக்கலாம்னு பொலம்பராணுங்க ...செம கெத்துல" - ஜெஸ்ஸி புகழ் பாடினான் கார்த்தி.

"ஏன்டா .. அவ நேத்து உட்ட பீட்டருக்கே எதாச்சும் பண்ணி இருக்கனும் .. இப்போ இப்படி வேற ஏத்தி விட்டோம், அப்புறம் அவள கைலையே  புடிக்க முடியாது. மச்சி, பொண்ணுங்கள அதிகமா ஆட விட்டா நமக்கு தான் பிரச்சனை ... " - ஜெய்.

"இவன் யோசிக்கிற விதமே சரி இல்லையே ... நாம ஜெஸ்ஸிய ரூட் விடற விசயத்த சொன்னா மௌனம் பேசியதே சூர்யா மாதிரி எதாச்சும் பண்ணினாலும் பண்ணுவான்... எதுக்கும் உஷாரா இருக்கறதுதான்  நமக்கும் நல்லது ...நீ சொல்றதும் கரெக்ட் தான் மச்சி ... எதாச்சும் பண்ணனும் ...  சரிடா தூக்கம் வருது... நான் தூங்கறேன்"  .... ஒருவாறாக பேச்சை முடித்துக்கொண்டு தூங்கச் சென்றான்.

இன்னிக்கு ஜெஸ்ஸிகிட்ட எப்படியாச்சும் பேசறோம். ப்ரண்டு ஆகறோம் .. "என்னடா ...கூப்பிட்டியா ..  ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு ?? " - ஜெய்.
நம்ம ஜெஸ்ஸிய பத்தி யோசிச்சாலே இவனுக்கு மூக்கு வேர்க்குதே  ....

"நான் எதுவும் சொல்லலையே மச்சி... லேட் ஆச்சு .. வா கிளம்பலாம்" .


முதல் நாள் தாமதமாக வந்ததன் புண்ணியமோ என்னவோ, பெண்களுக்கு பின்னால், முக்கியமாக ஜெஸ்ஸிக்கு பின்னால் இருந்த இருக்கை நிரந்தரமாக எங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.. 

எப்படி பேச்சை ஆரம்பிகிறது ?? நமக்கு தெரிஞ்ச ஒரே டெக்கினிக் பென்சிலையோ லப்பைரையோ கீழ போட்டுட்டு " ஏய் கேர்ள், டேக் தட் பென்சில் அண்ட் கிவ் நோ" தான்..  இத வச்சு அந்த வடக்கு தெரு வித்யாவ  வேணா ஏமாத்தலாம்.. நம்ம ஆளு பீட்டர் ஆச்சே ... பத்தாததுக்கு ஜெய் வேற பக்கதுல இருக்கான்.. இவன வச்சுகிட்டு பேசறது , அவளை ராக்கி கட்ட சொல்றது ரெண்டும் ஒன்னுதான்.

என்ன ஷாம்பூ, என்ன பெர்பியும் என்று ஆராய்வதிலேயே மொக்கையாக பொழுது கழிந்து கொண்டு இருந்த வேளையில் அந்த இன்ப அதிர்ச்சி நிகழ்ந்தது. ஆம், ப்ராடிகல்ஸ் லேப் பேட்ச் பிரிக்கப்பட்டது ..அதுவும் ரிஜிஸ்டர் வரிசையில் ..

பிசிக்ஸ் லேப் - கோகுல், ஜெய் , ஜெஸ்ஸி , கார்த்திக் , கயல் .

மேலும் இன்ப அதிர்ச்சி ..

கெமிஸ்ட்ரி லேப் - ஜெஸ்ஸி , கார்த்திக் . :-)

அருகில் பீட்டர் மறைத்து வைத்து வாசித்து கொண்டிருந்த அந்த ஆங்கில நாவலின் வாசகம் எதேச்சையாக கார்த்திக் கண்ணில் பட்டது .. 

        "GOD HAS A PLAN FOR EVERYONE"  

கடவுளை நம்பாதவனாக  இருந்தாலும் கார்த்திக்கு அந்த வரிகள் பிடித்துப்போய்தான் இருந்தது ..


முதல் லேப் கிளாஸ் என்பதால் வெறும் ரெகார்ட் எழுதுதல் மட்டுமே அன்றைய நிகழ்வாக இருந்தது. ஜெஸ்ஸியின் கையெழுத்தும் அவளை போன்றே அழகாக இருந்தது என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. இதற்கு மேலும் மௌனம் கூடாது என்றெண்ணி பேச்சை ஆரம்பித்தான் கார்த்திக். 


"உங்க முழு பேரே கயல் தானா இல்ல கண்களுக்கு மட்டுமா ?? " - சுஜாதாவின் வசனத்தை அடித்துவிட்டான்..கயல் முறைக்க, ஜெஸ்ஸியோ சிரித்தாள் .."வெரி ஹியுமரஸ்".சிட்னி ஷெல்டன் வாசிப்பவள், சுஜாதாவை வாசித்திருக்க வாய்ப்புகள் கம்மி தான்.. அப்போ அடிகடி யூஸ் பண்ணிக்கலாம். பாராட்டு பெற்ற பெருமிதத்தோடு ஜெய்ய பார்க்க, அவனோ  "எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு" என்று கேட்பது போல தோன்றியது ..


பிசிக்ஸ் லேப்பில் தான் ஜெய் கூடவே இருந்து சாவடிக்கிறான், கெமிஸ்ட்ரி லேப்லயாச்சும் அப்படி இப்படின்னு எதாச்சும் கெமிஸ்ட்ரி உருவாகும் என்று எதிர்பார்த்தான் கார்த்திக். அவளோ எக்ஸ்பெரிமென்ட் செய்வதிலேயே தீவிரமாக இருந்தாள்... எவ்வளோ பண்ணினாலும் கடைசில பக்கத்துக்கு பேட்ச்ல கேட்டுதான ரிசல்ட் எழுதுவா .. அவ்வப்போது பேசினாலும் "பென்சில்", "ரப்பர்", "பிப்பெட்" , "ப்யுரட்" , "ரெகார்ட்" , "கிராப்"  என்ற அளவிலேயே நாட்கள் நகர்ந்தன.. 


முதன் முதலாக அவளிடம் பேசிய அந்த வார்த்தைகள் இப்பவும் ஞாபகம் இருக்கு ..


"உன்னோட ஸ்கூல்மேட் IBT பிரவீன் உன்னோட மெயில் ஐடி கேட்டான்".
"தர முடியாதுன்னு போய் சொல்லு போ" , என்று அசிங்கபட்டதில் இருந்து ஜாஸ்தி பேச முற்படுவதில்லை. அவளது செயலையும், அழகையும் ரசிப்பதோடு சரி .. 


பூவோடு சேர்ந்து மணக்கும் நாரை போல , "ஜெஸ்ஸியின் பேட்ச்மேட்" என்ற ஒரே காரணத்தால் பலராலும் அடையாளம் காணப்பட்டான் கார்த்திக்.. காணப்பட்டான் என்பதைவிட அனைவரின் வயிற்றெறிச்சலை வாங்கி கட்டிக்கொண்டான் என்பதே உண்மை.


EEE பிளாக் வாசலில் அனாதையாக இருந்த "வாட்டர் டாக்டர்" I.T வாசலுக்கு மாற்றப்பட்ட பின்னர், சேவல்களின் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது .. வந்தவர்களிடம் தாகத்தை விட ஜெஸ்ஸியின் தாக்கமே மேலோங்கி இருந்தது. இப்படியே போச்சுனா எவனாச்சும் ஒருத்தன் என்னிக்காவது ஒருநாள் ப்ரொபோஸ் பண்ணி தொலைக்க  போறான்.. இவளும் ஓகே சொல்லிட்டானா ? ..நெவெர், எதுல வேணாலும் பொறுமையா இருக்கலாம், ஆனா லவ் சொல்றதுல மட்டும் இருக்க கூடாது ..  ஈவினிங் கிளாஸ் முடிஞ்ச உடனே சொல்லிட வேண்டியதுதான் ..சரியான சந்தர்பம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேளையில், நடந்த அந்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்தது..


நிகழப்போகும் விபரீதம் தெரியாமல், ஜெகநாதன் ஜெஸ்ஸியிடம் கூறிய அந்த வார்த்தைகள் !!!

"ஜெஸ்ஸி ..."

"ஓடிப்போலாமா ???" 
                                                                                           தொடரும் ...


Technorati Tags :  ,     , 
Read more ...
டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
 
இதுவரை ...

1. கோவை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது !!

இனி ...

2. கார்த்திக் மீட்ஸ் ஜெஸ்ஸி
   _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

மாலைபொழுது ஜெய்யோடும், விக்கியோடும் அரட்டையில் கழிந்தது. ஜெய்  அதிகமாக "மச்சான்" பயன்படுத்துவதை கவனித்தான் கார்த்திக். பக்கத்துக்கு ரூமிலும் I.T பசங்கதான் என்ற விவரமறிந்து காண சென்றனர். உள்ளே பிரேம் தனக்கு ஸ்கூலில் பெண்கள் எழுதிய 'slam book' ஐ பாலசுப்ரமணியிடம் காட்டி சீன் போட்டு கொண்டிருந்தான். அவர்களிடம் சிறிதுநேரம் மொக்கை போட்டுவிட்டு, மொட்டை மாடியில் மற்றொரு மொக்கை கூட்டம் நடந்து கொண்டிருப்பதை அறிந்து அங்கே சென்றனர். முதல் சந்திப்பிலேயே மாமா , மச்சி என ஆரம்பித்து, A ஜோக்ஸில் களைகட்டியது கச்சேரி. சபை கலைந்து படுப்பதற்கு சுமார் 1 மணி ஆனது.


வழக்கம் போல 6 மணிக்கு முழிப்பு தட்டியது. லுங்கியை சரி செய்துகொண்டு  எழுந்த கார்த்திக், அருகில் பார்த்தான். ஜெய் அடித்து போட்டவன் போல தூங்கிக் கொண்டிருக்க,  விக்னேஷ் விதவிதமான  கோலத்தில் S வடிவத்தில் சுருண்டு படுத்து கொண்டிருந்தான். பிரஷை எடுத்துக்கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றவனுக்கு ஹாஸ்டல் வாழ்க்கையின் முதல் அதிர்ச்சி காத்துகொண்டிருந்தது. கடைசியாக கஜினி முகமது காலத்துல கழுவினது போல் இருந்துது. பைப்பை திறந்தவனுக்கு இரண்டாவது அதிர்ச்சி காத்துகொண்டிருந்தது. தண்ணி என்ன காத்து  வருவதற்கான அறிகுறி கூட தென்படவில்லை. 

"அம்மா , பாத்ரூம்ல தண்ணி வரல, மோட்டார் கூட போட முடியாத உன்னால ?"

"வீட்ல சும்மாதான சுத்திட்டு இருக்க.. இந்த வேலைய கூட பண்ண முடியாதா? உனக்கெல்லாம் நேரம் வரும்போது தாண்டா அம்மாவோட அருமை தெரியும் ".

"அதெல்லாம் வரும்போது பாத்துக்கலாம்...மொதல்ல பாத்ரூம் கிளீன் பண்ணி வை".

ராஜா போல் வாழ்ந்த தன் வாழ்க்கை பறிபோனதை நினைத்து நொந்தான் கார்த்திக். "வாழ்கை ஒரு வட்டம் " என்ற தளபதியின் வரிகளில் உள்ள உண்மையை உணர்ந்தவனாய் மற்றொரு பாத்ரூமை  தேடிச் சென்றான். ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் தானும் சேர்ந்து கொண்டான். வெற்றிக்கதவை நெருங்கிய நேரத்தில், உள்ளே சென்றவன் வெளியேற தாமதம் ஆகியது.

"போதும் பாஸ்.. சீக்கிரம் வெளில வாங்க.. அர்ஜெண்டு" . பொறுமையிழந்த ஒருவன் கதவை தட்டினான்.

 "ஒரு 2 நிமிஷம் பொறுத்துகோங்க.. வந்துடறேன்" - பதில் வந்தது..

"என்னது பொறுத்துகிறதா , வள்ளுவர் மட்டும் இந்த லைன்ல நின்னு இருந்தார்னா பொறையுடைமை அதிகாரமே எழுதி இருக்க மாட்டார்." கார்த்திக் தனக்குள் புலம்பினான்.

"உள்ள இருக்கறவனுக்கு டைம் போறதே தெரியாது ..  வெளிய இருக்கறவனுக்கு தான் தெரியும் அது எவளோ ஸ்லோவா போகுதுன்னு" - மற்றொருவன் புலம்பினான்.

"எங்கயோ படிச்சு இருக்கோமே ?? அஹ்ஹ்ஹ ஐன்ஸ்டீன் , "தியரி ஆப்  ரிலேடிவிட்டி". ச்சே , இப்போ ஞாபகம் வருது... எக்சாம்ல கரெக்டா எழுதிருந்தா இந்நேரம் மெடிக்கல் சீட் வாங்கி இருக்கலாம்.. இப்படி வரிசைல நிக்கிற நிலைமை வந்து இருக்காது. " கார்த்திக்கின் சத்தமில்லாத புலம்பல்கள் தொடர்ந்தது.

இயற்கையும், இலக்கியமும், இயற்பியலும் சங்கமித்து கொண்டிருந்த வேளையில் கதவுகள் திறக்கப்பட்டன. புயலென உள்ளே நுழைந்தான் கார்த்திக். மற்றொரு ரூமில் தனக்கு வந்த  SMSக்கு விடை தேடிகொண்டிருந்தான் பாலசுப்ரமணி.

"Come like a horse, sit like a thief, Go like a Lion."

"மச்சி மணி  8 ஆச்சு , எந்திரிங்கடா , மொத நாளே கட் அடிக்கிற மாதிரி ஐடியாவா ?"  . தூங்கிகொண்டிருந்த ஜெய்யும், விக்னேஷும் எழுப்பிவிட்டு குளிக்கச் சென்றான் கார்த்திக். குளிச்சுட்டு வந்த gapல ரெண்டு பேரும் ரெடி ஆகி இருக்க "அடப்பாவிங்களா குளிசிங்களா இல்லையா?" என்று கலாய்த்தான் கார்த்திக். வாசலில் தாத்தா விசில் அடிக்க இவர்கள் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. இங்கே தாத்தா பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இதற்கு மறு உருவம் தான் இந்த, தாத்தா என்று அழைக்கப்படும் வார்டன். டிவி ரிமோட்டை பதுக்குவது, நைட் ரூம்ல ரோல் கால் எடுக்கறது, போட்டு குடுத்து அப்பாலஜி லெட்டர் எழுத வைக்கிறது, கிளாஸ் ரூம்க்கு வரிசைல கூட்டிட்டு போய் விடறது, இது தான் இவரோட பிரதான வேலை. இந்தியன் தாத்தாவின் மறு அவதாரமாக நினைத்துகொள்ளும் இவரை சமாளிப்பது அவ்வளவு எளிதான விசயமே கிடையாது.


"என்னா ஜெய், காலேஜ் வந்தாலும் லைன்ல போ , வரிசையா போன்னு காண்ட கிளப்பிட்டு இருக்கானுங்க"

" விடு மச்சான்.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ... சீனியர் பிகர்ஸ் எல்லாம் சைட் அடிச்சுட்டே போய்டலாம் .." 

எறும்பு கூட்டம் போல் சீராக நேர் வரிசையில் இடதுபுறம்  சென்று கொண்டிருக்க, வலதுபுறத்தில் சீனியர் பெண்கள் சைக்கிளை மிதித்து கடந்து சென்றனர். 

"எவளோ மார்க் மச்சான் போடலாம் ? ஒரு 8 ?" - ஜெய்

" 8 ஜாஸ்தின்னு நினைக்கறேன், 6 ஓகே " - பாடத்தை தவிர வேற எந்த மார்க்கை பற்றியும் தெரியாத கார்த்திக் சமாளித்தான்.

"நான் அந்த மாதிரி பையன் கிடையாது, எங்க வீட்ல என்னைஅப்படி வளர்க்கவில்லை" என்பதை போல் பார்த்தான் விக்னேஷ்.

க்ளாஸ் ரூம் மெயின் பில்டிங் முதல்  மாடியில் இருந்தது. இருபுறமும் பெரிய கண்ணாடி ஜன்னல், நடுவே அவற்றை இணைக்கும் பாலம் போல ஒரு பச்சை போர்டு, ஒன்று சேர்த்து போடப்பட்டிருந்த மேஜை சகிதம் காட்சியளித்தது வகுப்பறை. தாமதமாய் சென்றதால் உட்கார இடம் இல்லாமல், கடைசி வரிசையில் பெண்களுக்கு பின்னால் சென்று மூவரும் அமர்ந்தனர்.


பெண்களை ஓரகண்ணால் நோட்டம் விட்ட கார்த்திக்கு  காலேஜ் வாழ்க்கையின் மூன்றாவது பெரிய அதிர்ச்சி , தான் எதிர்பார்த்த   ரேஞ்சுக்கு ஒருத்தி கூட இல்லை என்பது தான். 

"படிக்கிற பொண்ணுங்க எல்லாமே இப்படி தான் இருப்பாங்களோ ? அப்போ  கோயம்பத்தூர் பொண்ணுங்க அழகா இருப்பாங்கனு சபரி சொன்னது ? இவளுங்க குடுக்கற ரியாக்சன பார்த்த ஒருவேளை அவுங்களுக்கும் இதே பீலிங்க்ஸ் இருக்கும் போல இருக்கு" - மைன்ட் வாய்சில் பேசினான் கார்த்திக்.

வந்த இங்க்லீஷ் வாத்தியார் ஆதிகாலத்து சம்பிரதாயமான "introduce yourself "இல் ஆரம்பிக்க, ஒவ்வொருத்தனும் தன்னோட வரலாற்றை ஒப்பித்தனர். 60 பேர் அடங்கிய கிளாஸ்ல 3 பேர் மட்டுமே கோவையை சேர்ந்தவர்கள். அந்த மூனும் பசங்க.. 

"அதான் ஒரு பொண்ணும் நம்ம நெனைச்ச மாதிரி இல்ல".. தனக்குதானே ஆறுதல் சொல்லிகொண்டான் கார்த்திக்.

"ஐ ஆம் ஜெய்குமார் ப்ரம் சேலம் . ஐ ஸ்டடிடு இன் வனவாணி மெட்ரிக்   ஹையர் ஸ்கூல். பாதர் இஸ் எ பிசினெஸ்மேன். மதர் இஸ் ஹோம் மேகர்."

"நேத்து எதோ கிராமத்து பேர சொன்னான். இப்போ சேலம் னு சொல்றான்". - கார்த்திக்

"ஐ ஆம் விக்னேஷ் ப்ரம் திருநெல்வேலி . ஐ ஸ்டடிடு இன் பாபுஜி மெமோரியல் ஸ்கூல்...பாதர் இஸ் பார்மர்.. மதர் இஸ் ஹவுஸ் வைப்... " 

"யு டூ புருடஸ்.. என்ன இவனும் அவன மாதிரியே சொல்றான். எதுக்கு வம்பு .. பேசாம நம்மளும் மதுரனு சொல்லிடுவோம் ." 

"ஐ ஆம் .." சொல்லிக்கொண்டே எழுந்த கார்த்திகை இடைமறித்து அந்த குரல்.

"எஸ்கியூஸ்மீ சார், மே ஐ கெட் இன்? "

வெள்ளை சுடிதார், அதுக்கு மேட்சிங்கா வெள்ளை வாட்ச் , மெலிதான சில்வர் செயின், DIESEL சின்னம் பொறிக்கப்பட்ட பேக் வலது கையில், டிராப்ட்டர் இடது கையில் , அழகான முகத்தில் ஓடி வந்ததற்கான வியர்வை துளிகள், ஒரு மாடர்ன் தேவதையாக தெரிந்தாள் அவள். மொத்த கிளாசும் அவளையே நோக்கியது. பசங்க கண்ணுல பரவசம். பொண்ணுங்க கண்ணுல பொறாமை.

"சாரி சார்.. ப்ரின்சிபலை பார்த்துட்டு வர லேட் ஆயுடுச்சு .."

"இட்ஸ் ஓகே.. கெட் இன்".

"என்னோட பேரு ஜெஸ்ஸி"

 "ஜெஸ்ஸி" பேரை கேட்டதும் கார்த்திக்கின் மனதில் யாரோ கிடார் வாசிப்பதை உணர்ந்தான். அதுவும் சாதா கிடார் இல்ல Bass கிடார் !!
 
"நேடிவ் சென்னை. டாடி இஸ் சீனியர் மேனேஜர் இன் விப்ரோ. மம்மி இஸ் ஹவுஸ் வைப். சிஸ்டர் இஸ் ஸ்டடியிங் 12th . ஹாபீஸ் ஆர் ரீடிங் நாவல்ஸ், சிட்னி ஷெல்டன்".

கார்த்திக்கு எதுவுமே காதில் விழவில்லை. வேறொரு உலகத்துக்கு பயணித்து கொண்டிருந்தான். தன்னை சுற்றி அனைத்துமே ஸ்லோ மோசனில் நடந்து கொண்டிருக்க, Bass கிடாரின் அரவணைப்போடு,  சம்பந்தமே இல்லாத மலையாள இசை பின்னணியில் ஒலிக்க, கார்த்திக்கின் முன் வரிசையில் சென்று அமர்ந்தாள் ஜெஸ்ஸி.

இளையராஜாவும் , ஏ. ஆர். ரஹ்மானும் போட்டி போட்டுகொண்டு உச்சகட்ட ஸ்ருதியை அடைந்து கொண்டிருக்க, "next next " என்று தாளத்தோடு ஒட்டாமல் ஆங்கில வார்த்தைகள் ஒலிக்க தொடங்கியது.

 "மச்சான் , உன்ன தாண்டா , டேய் " - ஜெய் காலை மிதிக்க சுயநினைவு  திரும்பிய கார்த்திக்

"ஐ ஆம் மதுர ப்ரம் கார்த்திக்" என்று உளறி கொட்டினான். 

தவறை உணர்வத்துக்குள் வகுப்பறையில் அனைவரும் சிரித்துவிட, சற்றே எரிச்சல் அடைந்தாலும் ஜெஸ்ஸியின் சிரிப்பு அவனை பரவசமூட்டியது. காய்ந்து போய் பசுமையே இல்லாமல் போய்கொண்டிருந்த தன் வாழ்கையில் முதன் முறையாக தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தான் கார்த்திக்.

"என்னை அடிச்சது அந்த காதல். அப்படியே தலைகீழா புரட்டி போட்டுச்சு"

                                                                             ஆரோமலே...
                               
Technorati Tags : , , , , ,


Read more ...

கல்லூரி வாழ்வில் கண்டு, கேட்டு , பார்த்த , பழகிய சம்பவங்களின் தொகுப்பே இந்த கதையின் மூலாதாரம்...

சுவாரஸ்யத்திற்காக எனது கற்பனை குதிரை கதை முழுவதும் ஓடவிடப்பட்டு இருக்கிறது .. குதிரை நல்லா ஓடி இருக்கா, இல்ல சுத்தமா ஓடலையானு படிச்சுட்டு சொல்லவும் ..

டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.

நட்பு எனப்படுவது யாதெனில்
---------------------------------

விடிஞ்சா கல்யாணம் .. இன்னும் ரெடி ஆக 3 மணி நேரம் கூட இல்லை ... மணப்பெண் அலங்காரம் ஆரம்பித்து இருக்க கூடும் .. தூங்க மனம் வராமல் உலவி கொண்டு இருந்தான் கார்த்திக்....3 மணி நேரத்துல என்ன பண்ணலாம் .. படுத்து தூங்கலாம் ? பசங்க ரூம்க்கு போய் மொக்க போடலாம் ? பழைய சம்பவங்களை நினைத்து அசை போடலாம் ... 

 

"பேசின வார்த்தைகள், ஏன் அவ சிரிச்ச சத்தங்கள் கூட மனசுக்குள்ள அப்படியே இருக்கு.மறக்கவே முடியாத தருணங்கள் அவை...இப்போ நெனச்சு பார்த்தா கூட கனவு மாதிரி தான் தோணுது .. ஏதோ நேத்து தான் மீட் பண்ணின மாதிரி இருக்கு ... இட் ஜஸ்ட் ஹேப்பண்ட் ... அவ பேர் ஜெஸ்ஸி .. அவ்ளோ அழகு. க்ளாஸி. படிச்சவ. வெல் ரெட். அவகிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு. செக்ஸி டூ." 


1. கோவை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது !!
----------------------------------------------------------------

"இந்த பஸ் லாலி ரோடு போகுமா?"


ஆமாம் , இல்லை என இவ்விரண்டுக்கும் பொதுவாக தலையசைத்த கண்டக்டரை "ஆரம்பமே சரி இல்லையே" என்று புலம்பிக்கொண்டே குழப்பத்துடன் பார்த்தான் கார்த்திக்.. "பாரதி பார்க், பால் கம்பெனி, லாலி ரோடு, அக்ரி காலேஜ், வடவள்ளி .. போலாம் ரைட்" .. என்று விளிக்க பஸ்சில் ஏறிக்கொண்டான். புகையை கக்கிக்கொண்டே கிளம்பிய 1C
பஸ்ஸோடு, கார்த்தியின் அடுத்த நான்கு வருட வாழ்க்கை பயணம் ஆரம்பித்தது.



4 ரூபாய் கொடுத்து வாங்கிய டிக்கெட்டை மடித்துக்கொண்டு ஜன்னல் சீட்டில் உக்கார்ந்தான். தாய் குலம் முன்பாதியிலும், பசங்க எல்லாரும் பின்பாதியிலும் அமர்ந்து இருந்த வழக்கம் விசித்திரமாய் இருந்தது. பேருந்தை நோட்டம் விட்டுக்கொண்டு இருந்த கார்த்தியின் பார்வை 2வது சீட்டில் இருந்த மஞ்சள் சுடிதார் மீது விழுந்தது. பிறை நிலாவை ஒத்த சற்றே சிறிய பொட்டு, ஜன்னல் காற்று அவளது கேசத்தோடு விளையாடி கொண்டிருக்க, "சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் சிறு இசையும்"  என கோவை சூரியன் FM வழியே இளையராஜா தன் பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்தார்."மாப்ள , கோவை பொண்ணுங்க எல்லாம் நம்ம ஊர் மாதிரி கிடையாது, செம்ம அழகா இருப்பாளுங்க.. அவுங்க ரேஞ்சே வேற. கொடுத்து வச்சவன் மச்சான் நீ ..". சபரி சொன்னது முற்றிலும் உண்மை என்பதை அந்த மஞ்சள் சுடிதார் உணர்த்தி கொண்டிருந்தாள்.

                         "அவளது நெற்றியில் இன்று,
                          முழு நிலா,
                          ஊரில் இன்று
                          அம்மாவசை."


என்று மொக்கையாக கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தவனை, "லாலி ரோடு ஸ்டாப் எல்லாம் இறங்கு" என்ற குரல் கலைத்தது. மஞ்சள் சுடிதாரை "வட போச்சே" பீலிங்கோடு பார்த்துகொண்டு இறங்கினான் .A1 பிரியாணி வாசனை வீதி வரை வந்து அழைப்பிதழ் கொடுத்து கொண்டு இருக்க, "வாங்க பாஸ், என்ன சாப்டறிங்க?" என்று அன்போடு விசாரித்தவரிடம்," 'ஜி.சி.டி'க்கு எப்படி போகணும் ? " என்று வினா எதிர் வினாதல் விடை அளித்தான்.
 




2 கி.மீ நடந்து இருப்பான், காலேஜ் தென்பட்டது .. பெரிய நுழைவாயில், இருபுறமும் அணிவகுத்து நின்ற மரங்கள், தார் ரோடு, எல்லாமே புதுசா இருந்துச்சு.. சீனியர்களின் "சிக்கிடாண்டா ஜூனியர்" பார்வைகளை கடந்து ஆடிட்டோரியத்தை அடைந்தான் கார்த்திக். புதிய முகங்கள், ஆங்கில குரல்கள், பள்ளி நண்பர்கள் கூட்டம் என அனைத்தையும் தாண்டி பசங்கள
விட பொண்ணுங்க கூட்டம் தான் ஜாஸ்தி என்று ஆண்ட்ரோஜென் மூளைக்கு சிக்னல் அனுப்பியது..


ஒரு வழியாக உள்ளே நுழைந்து Admission Form வாங்கி படிவத்தை பூர்த்தி செய்தான். "டியூஷன்  பீஸ் எவ்வளோ போடறதுன்னு தெரிலையே". அருகில் விசாரிக்க, 


"18,500/-,"ம்ம்ம் இந்த இடத்துல போடுங்க , அப்படியே உங்க கையெழுத்த இங்க போட்ருங்க .. ஹோ , நீங்களும் I.T தானா ? நானும் I.T தான்." என்று ஆரம்பித்தவனை,


"Sharaafath !!! உங்க அம்மா கூப்பிடுறாங்க" என்ற பெண்ணின் குரல் திசை திருப்பியது .. அட்மிசன் முழுவதும் இதே காட்சி அடிக்கடி ஒளிபரப்பு ஆகிக்கொண்டு இருந்தது ... "ஸ்கூல்லயே கரெக்டு பண்ணிட்டியா ?" என்று வாய் வரை வந்த கேள்வியை கட்டுப்படுத்திக்கொண்டான் கார்த்திக். அட்மிசன் முடிய 4 மணி ஆகிவிட , பெட்டியை தூக்கிகொண்டு பொன்னியாறு ஹாஸ்டல் நோக்கி நடந்தான்.


ரூம் நம்பர் 13. பொருட்கள் அடுக்கி வைக்க பட்டு இருந்தது.."ரூம்மேட்ஸ் ஏற்கனவே வந்துட்டாங்க போல" என்று எண்ணி உள்ளே சென்று தனது துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தான்.


"ஸாரி பாஸ் .. வெளில டீ சாப்பிட போய் இருந்தோம். இப்போ தான் வந்தீங்களா ?" .


"ஆமா ரொம்ப லேட் ஆக்கிடானுங்க" என்றான் கார்த்திக் சலிப்புடன் .


"விடுங்க பாஸ் .. இவுங்க எப்பவுமே இப்டித்தான்.. நான் ஜெயகுமார் , சொந்த ஊர் பெத்தநாயகன்பாளையம் , சேலம் பக்கம்.."


"நான் கார்த்திக்.. நம்மளுது மேட்டுநீரையத்தான் .. மதுர பக்கம் ... நீங்க திருநெல்வேலியா ?" மற்றவரை பார்த்து கேட்டான் கார்த்திக்..


"தென்காசி பக்கதுல கடபோகாதி .. திருநெல்வேலில இருந்து 1.30 மணி நேரம் .."


"உங்க பேரு?" - கார்த்திக் .
 

"விக்னேஷ்".   


"பார்த்தா ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கானுங்க ... இவனுங்க கூட தான் இருக்கணும்னு எழுதி இருக்கு.." என்று மனதிற்குள் சிரித்தபடியே தனது அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தான் கார்த்திக்.

                                                                             தொடரும் ...

Technorati Tags : , , , , , ,

Read more ...

எங்க பேட்ச் ... புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.... விசித்திரம் நிறைந்த பல பேட்ஸ்மேன்களை சந்தித்து இருக்கிறது. எங்க கிரிக்கெட் டீம்மும் விசித்திரமானது அல்ல.. அதை பற்றி எழுதும் நானும் புதுமையானவன் அல்ல... IPL சந்தையில் விலை போகாத கங்குலி போன்ற ஒரு ஜீவன்தான்...


EEE நளன் அடித்த கேட்சை தவறவிட்டேன், முழங்காலுக்கு கீழ் வந்த பந்தை நழுவவிட்டேன், 12 பாலில் 5 ரன் எடுக்க வேண்டிய மேட்சை டிரா ஆக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.

நளன் அடித்த கேட்சை தவறவிட்டேன், நளன் என் நண்பன் என்பதற்காக அல்ல, அதை பிடித்து இருந்தால் கை Multiple Fracture ஆகி இருக்கும் என்பதற்காக ... முழங்காலுக்கு கீழ் வந்த பந்தை நழுவவிட்டேன், பேஸிக் ஆவே நான் சோம்பேறி என்பதற்காக அல்ல, முன்ன பின்ன புடிச்சு பழக்கம் இருந்தா தான புடிக்கறத்துக்கு ... 12 பாலில் 5 ரன் எடுக்க வேண்டிய மேட்சை டிரா ஆக்கினேன், ஒப்பணிங் இறங்க வேண்டிய என்னை கடைசியில் இறக்கி விட்டதை கண்டிப்பதற்காக அல்ல, ஜெயிக்க போறோம்னு தெரிஞ்சத்துக்கு அப்பறம் ஜெயிக்கறதுல்ல அர்த்தமே இல்லனு தளபதி சொன்னதுற்காக..

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் விளையாடிய மேட்ச் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். நான் DLF maximum அடித்தது இல்லை, Karbon Kamal கேட்ச் பிடித்தது இல்லை, விளையாட்டு முழுவதும் லக்ஷ்மன் சிவராம கிரீஷ்னனின் மொக்கை commentary மட்டுமே நிறைந்து இருக்கின்றது. . கேளுங்கள் என் கதையை! அடுத்த தடவ டீம் போடறதுக்கு முன்னாடி தயவு செய்து கேளுங்கள்.


தமிழ்நாட்டிலே கோவையிலே பிரபல கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. UG ஒரு ஊர், PG ஒரு ஊர். தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? வந்த இடத்தில் முதல் பேட்டிங் செய்யும் வாய்ப்பு.. சுப்பிணியும் நானும் செமி ஃபைநல் வரை கொண்டு சென்றோம்.. அப்படி வாழ்ந்த காலத்தில், திடீரென கங்குலி போல் ஃபார்ம் இழந்தவர்களில் நானும் ஒருவன்.. ஃபார்ம் இழந்து தவித்தேன் .. வீட்டை கூட்டுவது போல் ஒரே ஒரு shot மட்டும் ஆடும் கார்த்தி ஒப்பணிங் இறக்கப்பட்டான்... கல்லூரியிலும், விழாவிலும் சேர்ந்து செயல்படும் CS & IT கிரிக்கெட்டிலும் ஒன்று சேர ஆரம்பித்தது ... கடைசியில் டீமில் இருந்தே துரத்தப்பட்டேன் ..

நான் நினைத்து இருந்தால் 12th man ஆக ஒரு நாள் – அம்பயர் ஆக ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா நீங்கள் விரும்புகிறீர்கள்?

ஓப்பணிங் இறங்கி ட்ராவிட் மாதிரி விளையாடும் என்னை கடைசியில் இறங்கி அடித்து ஆட சொன்னது யார் குற்றம்.. என் குற்றமா ? அல்லது டீமில் இருந்து என்னை வெளியேற்ற நடந்த சதியா?? Wanted ஆக வந்த என்னை டீமில் எடுக்காமல், வர மாட்டேன் என்று அடம் பிடித்த பாலாஜியை டீமில் எடுத்தது யார் குற்றம்... என் குற்றமா? எப்போதும் முதல் ஓவர் வீசும் விக்னேஷ் பேட்டிங்லும் எனக்கு முன்னால் இறங்குவது யார் குற்றம்? ... என் குற்றமா ? அல்லது அப்டியே இறங்கினாலும் என்னை ரன் அவுட் செய்தானே அது யார் குற்றம் ? IT மட்டும் விளையாடிய காலங்கள் மாறி CS & IT சேர்ந்து விளையாட ஆரம்பித்தது யார் குற்றம் ?
... என் குற்றமா ?


விக்கி என்னை ரன் அவுட் செய்த காட்சி

சொந்த டீமில் சேர்க்க மறுத்தார்கள் .. ஓடினேன் ... EEE மக்கள் என்னை 'மேட்ச் விண்ணர்' என்று கிண்டல் செய்தார்கள் ... மீண்டும் ஓடினேன் ... ஃபேஸ் புக்கிலும், ஆர்க்குட்டில் போடுவதற்கு போட்டோ எடுக்க ஸ்டில் கொடுத்து போது அதை வீடியோ எடுத்து கலாய்தார்கள்... ஓடினேன் ஓடினேன், சுப்பிணி கம்ப்யூட்டரில் EA sports கிரிக்கெட் ஆவது விளையாடலாம் என்று ஓடினேன்... அங்கும் விக்னேஷ் இருந்ததால் திரும்பி வந்துவிட்டேன்... அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று டீம் எடுக்கும் சிலர்... செய்தார்களா? எடுத்தார்களா என்னை டீமில்?

இந்த மாதிரி எவளோ தான் புலம்பினாலும், கல்லூரி வாழ்க்கைல பிரிக்க முடியாத ஒரு எபிஸோட் - கிரிக்கெட்... கிரிக்கெட் விளையாடும் போது நடந்த காமெடி, மகிழ்ச்சி , வெற்றி , தோல்வி எல்லாமே இப்பொழுதும் நாங்கள் நினைத்து நினைத்து அசை போடும் மகிழ்ச்சியான தருணங்கள் ... கண்ணன் - ஆல் ரவுண்டர் , ஜெய் - மாங்கா பௌலிங், மதுர - கேப்டன்/ sketch போட்றவர் , மணி - காட்டான் எல்லாமே எப்பொழுதும் நினைத்தாலே இனிக்கும்
நிகழ்வுகள் ...

கல்லூரி இறுதி ஆண்டில் நான் [ஒரு விளம்பரம்தான் ] வெட்டி ஒட்டிய எங்களது கிரிக்கெட் தொகுப்பு ....




நன்றி,
பிரேம்.


Technorati Tags : , , , ,
Read more ...