
அல்லும் பகலும்
வேலையை தவிர்த்து
வேறேதும் செய்யாது,
வீட்டிற்கும் அலுவலகத்திற்கும்
செக்குபோல் சுழலும்
வாலிப வாழ்கையின்
வசந்தமற்ற மற்றுமொரு
வழக்கமான மாலைபொழுதினில்
கதிரவன் கரைய
கார்முகில் வாய்பிளந்து
பொழிகிறது வான்
ஜன்னலோரம் நான்.
முகத்தில் அடித்தது
மழையின் சாரல்கள்
மனதை நனைத்தது
ஞாபகத் தூறல்கள்.
அனுதினமும் முகநூலில்
அளவளாவும்...