கல்லூரி வாழ்வில் கண்டு, கேட்டு , பார்த்த , பழகிய சம்பவங்களின் தொகுப்பே இந்த கதையின் மூலாதாரம்...

சுவாரஸ்யத்திற்காக எனது கற்பனை குதிரை கதை முழுவதும் ஓடவிடப்பட்டு இருக்கிறது .. குதிரை நல்லா ஓடி இருக்கா, இல்ல சுத்தமா ஓடலையானு படிச்சுட்டு சொல்லவும் ..

டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. சுவாரஸ்யத்திற்காகவும், குஜல்டிக்காகவும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.

நட்பு எனப்படுவது யாதெனில்
---------------------------------

விடிஞ்சா கல்யாணம் .. இன்னும் ரெடி ஆக 3 மணி நேரம் கூட இல்லை ... மணப்பெண் அலங்காரம் ஆரம்பித்து இருக்க கூடும் .. தூங்க மனம் வராமல் உலவி கொண்டு இருந்தான் கார்த்திக்....3 மணி நேரத்துல என்ன பண்ணலாம் .. படுத்து தூங்கலாம் ? பசங்க ரூம்க்கு போய் மொக்க போடலாம் ? பழைய சம்பவங்களை நினைத்து அசை போடலாம் ... 

 

"பேசின வார்த்தைகள், ஏன் அவ சிரிச்ச சத்தங்கள் கூட மனசுக்குள்ள அப்படியே இருக்கு.மறக்கவே முடியாத தருணங்கள் அவை...இப்போ நெனச்சு பார்த்தா கூட கனவு மாதிரி தான் தோணுது .. ஏதோ நேத்து தான் மீட் பண்ணின மாதிரி இருக்கு ... இட் ஜஸ்ட் ஹேப்பண்ட் ... அவ பேர் ஜெஸ்ஸி .. அவ்ளோ அழகு. க்ளாஸி. படிச்சவ. வெல் ரெட். அவகிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு. செக்ஸி டூ." 


1. கோவை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது !!
----------------------------------------------------------------

"இந்த பஸ் லாலி ரோடு போகுமா?"


ஆமாம் , இல்லை என இவ்விரண்டுக்கும் பொதுவாக தலையசைத்த கண்டக்டரை "ஆரம்பமே சரி இல்லையே" என்று புலம்பிக்கொண்டே குழப்பத்துடன் பார்த்தான் கார்த்திக்.. "பாரதி பார்க், பால் கம்பெனி, லாலி ரோடு, அக்ரி காலேஜ், வடவள்ளி .. போலாம் ரைட்" .. என்று விளிக்க பஸ்சில் ஏறிக்கொண்டான். புகையை கக்கிக்கொண்டே கிளம்பிய 1C
பஸ்ஸோடு, கார்த்தியின் அடுத்த நான்கு வருட வாழ்க்கை பயணம் ஆரம்பித்தது.



4 ரூபாய் கொடுத்து வாங்கிய டிக்கெட்டை மடித்துக்கொண்டு ஜன்னல் சீட்டில் உக்கார்ந்தான். தாய் குலம் முன்பாதியிலும், பசங்க எல்லாரும் பின்பாதியிலும் அமர்ந்து இருந்த வழக்கம் விசித்திரமாய் இருந்தது. பேருந்தை நோட்டம் விட்டுக்கொண்டு இருந்த கார்த்தியின் பார்வை 2வது சீட்டில் இருந்த மஞ்சள் சுடிதார் மீது விழுந்தது. பிறை நிலாவை ஒத்த சற்றே சிறிய பொட்டு, ஜன்னல் காற்று அவளது கேசத்தோடு விளையாடி கொண்டிருக்க, "சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் சிறு இசையும்"  என கோவை சூரியன் FM வழியே இளையராஜா தன் பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்தார்."மாப்ள , கோவை பொண்ணுங்க எல்லாம் நம்ம ஊர் மாதிரி கிடையாது, செம்ம அழகா இருப்பாளுங்க.. அவுங்க ரேஞ்சே வேற. கொடுத்து வச்சவன் மச்சான் நீ ..". சபரி சொன்னது முற்றிலும் உண்மை என்பதை அந்த மஞ்சள் சுடிதார் உணர்த்தி கொண்டிருந்தாள்.

                         "அவளது நெற்றியில் இன்று,
                          முழு நிலா,
                          ஊரில் இன்று
                          அம்மாவசை."


என்று மொக்கையாக கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தவனை, "லாலி ரோடு ஸ்டாப் எல்லாம் இறங்கு" என்ற குரல் கலைத்தது. மஞ்சள் சுடிதாரை "வட போச்சே" பீலிங்கோடு பார்த்துகொண்டு இறங்கினான் .A1 பிரியாணி வாசனை வீதி வரை வந்து அழைப்பிதழ் கொடுத்து கொண்டு இருக்க, "வாங்க பாஸ், என்ன சாப்டறிங்க?" என்று அன்போடு விசாரித்தவரிடம்," 'ஜி.சி.டி'க்கு எப்படி போகணும் ? " என்று வினா எதிர் வினாதல் விடை அளித்தான்.
 




2 கி.மீ நடந்து இருப்பான், காலேஜ் தென்பட்டது .. பெரிய நுழைவாயில், இருபுறமும் அணிவகுத்து நின்ற மரங்கள், தார் ரோடு, எல்லாமே புதுசா இருந்துச்சு.. சீனியர்களின் "சிக்கிடாண்டா ஜூனியர்" பார்வைகளை கடந்து ஆடிட்டோரியத்தை அடைந்தான் கார்த்திக். புதிய முகங்கள், ஆங்கில குரல்கள், பள்ளி நண்பர்கள் கூட்டம் என அனைத்தையும் தாண்டி பசங்கள
விட பொண்ணுங்க கூட்டம் தான் ஜாஸ்தி என்று ஆண்ட்ரோஜென் மூளைக்கு சிக்னல் அனுப்பியது..


ஒரு வழியாக உள்ளே நுழைந்து Admission Form வாங்கி படிவத்தை பூர்த்தி செய்தான். "டியூஷன்  பீஸ் எவ்வளோ போடறதுன்னு தெரிலையே". அருகில் விசாரிக்க, 


"18,500/-,"ம்ம்ம் இந்த இடத்துல போடுங்க , அப்படியே உங்க கையெழுத்த இங்க போட்ருங்க .. ஹோ , நீங்களும் I.T தானா ? நானும் I.T தான்." என்று ஆரம்பித்தவனை,


"Sharaafath !!! உங்க அம்மா கூப்பிடுறாங்க" என்ற பெண்ணின் குரல் திசை திருப்பியது .. அட்மிசன் முழுவதும் இதே காட்சி அடிக்கடி ஒளிபரப்பு ஆகிக்கொண்டு இருந்தது ... "ஸ்கூல்லயே கரெக்டு பண்ணிட்டியா ?" என்று வாய் வரை வந்த கேள்வியை கட்டுப்படுத்திக்கொண்டான் கார்த்திக். அட்மிசன் முடிய 4 மணி ஆகிவிட , பெட்டியை தூக்கிகொண்டு பொன்னியாறு ஹாஸ்டல் நோக்கி நடந்தான்.


ரூம் நம்பர் 13. பொருட்கள் அடுக்கி வைக்க பட்டு இருந்தது.."ரூம்மேட்ஸ் ஏற்கனவே வந்துட்டாங்க போல" என்று எண்ணி உள்ளே சென்று தனது துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தான்.


"ஸாரி பாஸ் .. வெளில டீ சாப்பிட போய் இருந்தோம். இப்போ தான் வந்தீங்களா ?" .


"ஆமா ரொம்ப லேட் ஆக்கிடானுங்க" என்றான் கார்த்திக் சலிப்புடன் .


"விடுங்க பாஸ் .. இவுங்க எப்பவுமே இப்டித்தான்.. நான் ஜெயகுமார் , சொந்த ஊர் பெத்தநாயகன்பாளையம் , சேலம் பக்கம்.."


"நான் கார்த்திக்.. நம்மளுது மேட்டுநீரையத்தான் .. மதுர பக்கம் ... நீங்க திருநெல்வேலியா ?" மற்றவரை பார்த்து கேட்டான் கார்த்திக்..


"தென்காசி பக்கதுல கடபோகாதி .. திருநெல்வேலில இருந்து 1.30 மணி நேரம் .."


"உங்க பேரு?" - கார்த்திக் .
 

"விக்னேஷ்".   


"பார்த்தா ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கானுங்க ... இவனுங்க கூட தான் இருக்கணும்னு எழுதி இருக்கு.." என்று மனதிற்குள் சிரித்தபடியே தனது அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தான் கார்த்திக்.

                                                                             தொடரும் ...

Technorati Tags : , , , , , ,

Read more ...

எங்க பேட்ச் ... புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.... விசித்திரம் நிறைந்த பல பேட்ஸ்மேன்களை சந்தித்து இருக்கிறது. எங்க கிரிக்கெட் டீம்மும் விசித்திரமானது அல்ல.. அதை பற்றி எழுதும் நானும் புதுமையானவன் அல்ல... IPL சந்தையில் விலை போகாத கங்குலி போன்ற ஒரு ஜீவன்தான்...


EEE நளன் அடித்த கேட்சை தவறவிட்டேன், முழங்காலுக்கு கீழ் வந்த பந்தை நழுவவிட்டேன், 12 பாலில் 5 ரன் எடுக்க வேண்டிய மேட்சை டிரா ஆக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.

நளன் அடித்த கேட்சை தவறவிட்டேன், நளன் என் நண்பன் என்பதற்காக அல்ல, அதை பிடித்து இருந்தால் கை Multiple Fracture ஆகி இருக்கும் என்பதற்காக ... முழங்காலுக்கு கீழ் வந்த பந்தை நழுவவிட்டேன், பேஸிக் ஆவே நான் சோம்பேறி என்பதற்காக அல்ல, முன்ன பின்ன புடிச்சு பழக்கம் இருந்தா தான புடிக்கறத்துக்கு ... 12 பாலில் 5 ரன் எடுக்க வேண்டிய மேட்சை டிரா ஆக்கினேன், ஒப்பணிங் இறங்க வேண்டிய என்னை கடைசியில் இறக்கி விட்டதை கண்டிப்பதற்காக அல்ல, ஜெயிக்க போறோம்னு தெரிஞ்சத்துக்கு அப்பறம் ஜெயிக்கறதுல்ல அர்த்தமே இல்லனு தளபதி சொன்னதுற்காக..

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் விளையாடிய மேட்ச் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். நான் DLF maximum அடித்தது இல்லை, Karbon Kamal கேட்ச் பிடித்தது இல்லை, விளையாட்டு முழுவதும் லக்ஷ்மன் சிவராம கிரீஷ்னனின் மொக்கை commentary மட்டுமே நிறைந்து இருக்கின்றது. . கேளுங்கள் என் கதையை! அடுத்த தடவ டீம் போடறதுக்கு முன்னாடி தயவு செய்து கேளுங்கள்.


தமிழ்நாட்டிலே கோவையிலே பிரபல கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. UG ஒரு ஊர், PG ஒரு ஊர். தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? வந்த இடத்தில் முதல் பேட்டிங் செய்யும் வாய்ப்பு.. சுப்பிணியும் நானும் செமி ஃபைநல் வரை கொண்டு சென்றோம்.. அப்படி வாழ்ந்த காலத்தில், திடீரென கங்குலி போல் ஃபார்ம் இழந்தவர்களில் நானும் ஒருவன்.. ஃபார்ம் இழந்து தவித்தேன் .. வீட்டை கூட்டுவது போல் ஒரே ஒரு shot மட்டும் ஆடும் கார்த்தி ஒப்பணிங் இறக்கப்பட்டான்... கல்லூரியிலும், விழாவிலும் சேர்ந்து செயல்படும் CS & IT கிரிக்கெட்டிலும் ஒன்று சேர ஆரம்பித்தது ... கடைசியில் டீமில் இருந்தே துரத்தப்பட்டேன் ..

நான் நினைத்து இருந்தால் 12th man ஆக ஒரு நாள் – அம்பயர் ஆக ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா நீங்கள் விரும்புகிறீர்கள்?

ஓப்பணிங் இறங்கி ட்ராவிட் மாதிரி விளையாடும் என்னை கடைசியில் இறங்கி அடித்து ஆட சொன்னது யார் குற்றம்.. என் குற்றமா ? அல்லது டீமில் இருந்து என்னை வெளியேற்ற நடந்த சதியா?? Wanted ஆக வந்த என்னை டீமில் எடுக்காமல், வர மாட்டேன் என்று அடம் பிடித்த பாலாஜியை டீமில் எடுத்தது யார் குற்றம்... என் குற்றமா? எப்போதும் முதல் ஓவர் வீசும் விக்னேஷ் பேட்டிங்லும் எனக்கு முன்னால் இறங்குவது யார் குற்றம்? ... என் குற்றமா ? அல்லது அப்டியே இறங்கினாலும் என்னை ரன் அவுட் செய்தானே அது யார் குற்றம் ? IT மட்டும் விளையாடிய காலங்கள் மாறி CS & IT சேர்ந்து விளையாட ஆரம்பித்தது யார் குற்றம் ?
... என் குற்றமா ?


விக்கி என்னை ரன் அவுட் செய்த காட்சி

சொந்த டீமில் சேர்க்க மறுத்தார்கள் .. ஓடினேன் ... EEE மக்கள் என்னை 'மேட்ச் விண்ணர்' என்று கிண்டல் செய்தார்கள் ... மீண்டும் ஓடினேன் ... ஃபேஸ் புக்கிலும், ஆர்க்குட்டில் போடுவதற்கு போட்டோ எடுக்க ஸ்டில் கொடுத்து போது அதை வீடியோ எடுத்து கலாய்தார்கள்... ஓடினேன் ஓடினேன், சுப்பிணி கம்ப்யூட்டரில் EA sports கிரிக்கெட் ஆவது விளையாடலாம் என்று ஓடினேன்... அங்கும் விக்னேஷ் இருந்ததால் திரும்பி வந்துவிட்டேன்... அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று டீம் எடுக்கும் சிலர்... செய்தார்களா? எடுத்தார்களா என்னை டீமில்?

இந்த மாதிரி எவளோ தான் புலம்பினாலும், கல்லூரி வாழ்க்கைல பிரிக்க முடியாத ஒரு எபிஸோட் - கிரிக்கெட்... கிரிக்கெட் விளையாடும் போது நடந்த காமெடி, மகிழ்ச்சி , வெற்றி , தோல்வி எல்லாமே இப்பொழுதும் நாங்கள் நினைத்து நினைத்து அசை போடும் மகிழ்ச்சியான தருணங்கள் ... கண்ணன் - ஆல் ரவுண்டர் , ஜெய் - மாங்கா பௌலிங், மதுர - கேப்டன்/ sketch போட்றவர் , மணி - காட்டான் எல்லாமே எப்பொழுதும் நினைத்தாலே இனிக்கும்
நிகழ்வுகள் ...

கல்லூரி இறுதி ஆண்டில் நான் [ஒரு விளம்பரம்தான் ] வெட்டி ஒட்டிய எங்களது கிரிக்கெட் தொகுப்பு ....




நன்றி,
பிரேம்.


Technorati Tags : , , , ,
Read more ...
பதிவு எழுதி பல நாட்கள் ஆச்சு... ஏதாச்சும் எழுதணும்.. ஆனா என்ன எழுதறதுனு தான் ஒரே குழப்பம்... சரி வழக்கம் போல கல்லூரி வாழ்க்கை பத்தி ஏதாச்சும் மொக்கை போடலாம்னு பார்த்தா நம்ம நண்பர்கள் அது ஒன்ன மட்டும் தான் வச்சு நான் கடைய நடத்துரதா ஊருக்குள்ள கிளப்பி விட்டுட்டு இருக்கானுங்க... நீண்ட நாட்களாக கவிதை எழுத வேண்டும் என்ற ஒரு விபரீத ஆசை வேற... பல வருடங்களா எல்லா மனப்பாட செய்யுளுக்கும் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ,இது ஒன்ன மட்டும் வச்சு சமாளிச்ச ஆளு நம்ம.. இதுல பல இரவுகள் மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்து தூக்கம் வந்ததே தவிர கவிதை மட்டும் வந்த மாதிரி தெரில... இருந்தாலும் பல முயற்சிகள் செய்து கவிதை மாதிரி ஒண்ணு எழுதி, நெனச்ச இடத்துல ENTER அடிச்சு ஒரு கவிதை ஃபீல் கொண்டு வர ட்ரை பண்ணி எழுதி வச்சேன்... தமிழ ஏற்கனவே எல்லாரும் கொலை பண்றது போதும், நம்மளும் எதுக்கு பண்ணிக்கிட்டுனு, எல்லாத்தையும் ஓரம் கட்டி வச்சுட்டு பொழப்ப பார்க்க போயாச்சு..நேத்து தான் "வானம்" படத்தோட பாட்டு கேட்க நேர்ந்தது..

அதுல லிட்டில் யங் சூப்பர் ஸ்டார் சிம்புவின் வரிகளுக்கு, யுவனின் இசை...

"ஏவன்டி உன்னை பெத்தான்,அவன் கைல கிடைச்சா செத்தான்.
ஏவன்டி உன்னை பெத்தான்,அவன் கைல கிடைச்சா செத்தான்.
ஏவன்டி உன்னை பெத்தான்,அவன் கைல கிடைச்சா செத்தான்.
ஏவன்டி உன்னை பெத்தான்,அவன் கைல கிடைச்சா செத்தான். "


அப்டியே என்னோடத படிச்சு பார்த்தேன்... மேல இருக்கறத்துக்கு நம்ம எழுத்து பன்மடங்கு பரவாயில்லைனு தோணுச்சு... அதன் விளைவே பின்வரும் எனது படைப்பு...


முதல் முயற்சி.. பிழை இருப்பின் மன்னிதருளவும்..




அன்னம் இட்ட அன்னையிடத்தில்
வராத கண்ணீர்
உன்னிடத்தில் வந்தது ஏனோ?

என்னவளின் இதழ் சுவையை விட
உன் சுவை
கண்ட நாள் முதலே
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் ஏராளம்.

உன்னால்தான் என்னுள்
எத்தனை வேதியல் மாற்றங்கள்
நடுநிசிகளில்
விழிக்க வைத்தாய்
அதிகாலை பகலவனை
பலமுறை காண வைத்தாய்

வாசிப்பவர்கள் நினைப்பார்கள்
கவிதைக்குக் காரணம்
காதல் என்று..

எனக்கு அல்லவா தெரியும்
காரம் என்று..


ஆந்திரா மெஸ்...



--பிரேம்


Read more ...


4 வருட கல்லூரி வாழ்க்கையில், எவ்வளோ தான் மறக்க முடியாத பல நிகழ்வுகள் நடந்து இருந்தாலும், சரக்கு அடிக்கும் இடத்தில் உண்டாகும் சுவையான சம்பவங்களை இப்போது எண்ணி பார்த்தாலும் ரசிக்கும் படியாகவே இருக்கும்.. முதல் குடி, பரம குடி,ஓசி குடி, பியர் பார்ட்டி, ஸைட் டிஷ் கூட்டம், மிக்ஸிங் பார்ட்டி, சீன் பார்ட்டி,ஆஃப் பாய்ல் பார்ட்டி என்று குணத்தால் வேறுபட்டாலும் சரக்கு என்று வரும்பொழுது அனைத்து குடிமகன்களும் ஒன்றாக சபையில் அமர்ந்து, காட்டும் ஒற்றுமைக்கு ஈடு இணை கிடையாது.. அதுலயும் ரெண்டு நாளைக்கு முன்னாடி ரோட்ல அடிச்சிக்கிட்டு கிடந்தது எல்லாம் மாமா மச்சான்னு கூடி பரஸ்பரம் கொண்டாடிக்குவானுங்க..ஸவர்ஸ் பார் (அதாங்க எங்க காலேஜ் குடிமகன்களின் ஒரே கோவில்), தந்தூரி சிக்கன், கோல்ட் ஃப்லேக் சிகரெட்டில் தொடங்கி மாத கடைசியானால் டாஸ்மாக், ஊறுகாய் பாக்கெட், காஜா பீடி வைத்து அட்ஜஸ்ட் செய்யப்படுமே தவிர இதுவரை நிறுத்த பட்டதாக சரித்திரம் இல்லை. எதற்கு கேட்டாலும் இல்லாத காசு சரக்கு என்று வரும் போது மட்டும் எங்கே இருந்து தான் வரும்னு தெரியாது...படித்த 4 ஆண்டுகளில் என்னை சுற்றி நடந்த, நான் பார்த்த, உடன் இருந்து ரசித்த சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறேன். மேலும் வீட்டிற்கு ஆட்டோ வரலாம் என்ற பயத்தினாலும், அடுத்த பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும் போது முகத்தில் பேண்டேஜ் ஒட்டும் அபாயம் மிகவும் பிரகாசமாக தெரிவதாலும், பொது நலம் கருதி நண்பர்கள் பெயரை வெளியிடாமல் தொடர்கிறேன்.

டிஸ்கி: குடி குடியை கெடுக்கும். மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு.


காலம்: முதல் ஆண்டு இடம்: பொன்னையாறு விடுதி

கல்லூரி தொடங்கிய ஆரம்ப காலம், அதிகம் பேசி பழகாத காரணத்தால் எந்த பூனை பால் குடிக்கும் என்று தெரிய வாய்ப்பு இல்லாமலே போய் விட்டது. முதல் ஆண்டு என்பதால் ராக்கிங் காரணமாக இருந்த கண்டிப்புகளுக்கு நடுவே சரக்கு பரிமாற்றம் மிகவும் கடினமான விசயமாக இருந்து வந்தது... அப்போது தான் கெத்து கேங் என்று எல்லராலும் பரவலாக அறியப்பட்ட சிலர் முதல் முறையாக சரக்கு அடித்ததாக செய்தி பரவியது.. அதில் நம்ம நண்பர் ஒருத்தர் நல்லா சரக்கு அடிச்சுட்டு ஓ ஓ என்று சவுண்டு போட்டு பொலம்பியதாக வதந்தி..அதுவரை அவன் ஒருவனை தவிர அனைவரும் சொம்பாகவே இருந்தோம்..பின் வந்த நாட்களில் தான் மேலும் மூவர் பள்ளி நாட்களிலேயே சரக்கு அடித்து இருப்பது தெரிய வந்தது.. இருப்பினும் சபை இல்லாத காரணத்தால் சரக்கு விசயத்தில் முதல் ஆண்டு மொக்கையாகவே கழிந்தது என்று சொல்லலாம்.

காலம்: இரண்டாம் ஆண்டு இடம்: ஸவர்ஸ் பார்

எங்கள் வகுப்பு பல குடிமகன்களை கண்டது.. நண்பர் ஒருவரை வழக்கம் போல ஏத்தி விட்டு அரியர் பேப்பர் க்ளியர் பண்ணினதற்கு ஸவர்ஸ் பாரில் ட்ரீட் வைக்க சொல்ல, அவரும் ஓகே சொல்லிவிட்டார்.. ட்ரீட் வைத்த நண்பனையும் சேர்த்து புது முகங்கள் 3 பேர் , மேலே சொல்ல பட்ட 4 பேர், அப்புறம் ஸைட் டிஷ்க்கு 8 பேர்னு ஒரு கூட்டமே கிளம்பினோம்.. முதல் முறையாக பாருக்குள் நுழையப் போகிறோம் என்கிற உற்சாகமும், பயமும் எங்கள் முகத்தில் தெரிந்தது...

"கொஞ்சமா டேஸ்ட் பாரு மச்சி.. லைட்டா கசக்கும்.. புடிச்சு இருந்தா குடி.. இல்லாட்டி கம்ப்பெல் பண்ண மாட்டேன்" .. ஃபர்ஸ்ட் டைம் குடிமகன்களுக்கு வழங்கப்படும் அறிவுரை, பெரும்பாலும் மிக்ஸிங் பார்ட்டியிடம் இருந்தே வரும்.. அங்கும் அதே தான் நடந்தது...

ஸவர்ஸ் பார் (காலேஜ் குடிமகன்களின் ஒரே கோவில்)

முதல் முறையா ட்ரை பண்ணும் நண்பர்கள் பியர் ஆர்டர் பண்ண, நடு நிலை/உயர் நிலை குடிமகன்கள் ஏளனப் பார்வையுடன் ஹாட் ஆர்டர் செய்ய, நாங்கள் ஸைட் டிஷ்காக காத்திருந்தோம். நண்பர் பீரின் கசப்பு தன்மை பிடிக்காமல் நேரடியாக ஹாட்க்கு தாவினார்.. பின்பு தான் தெரிந்தது ஸைட் டிஷ் லிமிடெட் என்றும் அது சரக்கு அடிப்பவர்களுக்கே பத்தாது என்றும்.. தந்தூரியை எதிர் பார்த்து வந்த எங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமும் மீதி பொரியும் தான்.. அதையும் சரக்கு கூட்டம் மேய்ந்து கொண்டு இருந்தது.. நண்பர் போதயில் பொரியை அள்ளி நெஞ்சில் போட்டு கொண்டு இருந்தார், கேட்டதற்கு தனது வாய் அங்கே இருப்பதாக நினைத்தாராம். :-) அவரை ஹாஸ்டலில் விட சென்ற மிக்ஸிங் நண்பர் திரும்பி வரும் வழியில் போலீஸ் ஸ்டேசன் முன்னாடியே ஆக்ஸிடெண்ட் ஆகி விழ, வண்டியை அங்கயே விட்டு விட்டு பாருக்குள் வந்து விட்டார்.. எப்படி வண்டியை திரும்பி மீட்டார்ன்னு தனி பதிவே போடலாம்..

காலம்: மூன்றாம் ஆண்டு இடம்: ஹாலீவுட் பார்

தண்ணி அடிக்கும் பழக்கம் வெகுவாக குறைத்ததற்கு, Placement இல் காட்டிய அக்கறைய விட பாலாஜியன் கோபத்திற்கு ஆள் ஆகி விட கூடாதே என்பதுதான் காரணம். பொருத்தது போதும்னு முடிவு பண்ணி, ஒரு 6 பேர் கொண்ட குழு புது முயற்சியாக ரயில்வே ஸ்டேஷண் எதிரில் இருக்கும் ஹாலீவுட் பார் வரைக்கும் சென்று சரக்கு அடித்தனர். குழு தலைவர் கொஞ்சம் ஓவரா போனதால், அங்கயே ஆம்லெட் போட்டு, பஸ்ல கைதாங்கலா கூட்டிட்டு வந்து, சைக்கிள் ல வச்சு, தரைல தவழ்ந்து ஒரு வழியா ஹாஸ்டல் வந்து சேர்ந்தார். அன்று முதல் உருவானது தான் இந்த ஹாலீவுட் ஸ்குவாட்..


காலம்: இறுதி ஆண்டு இடம்: வெள்ளாரு விடுதி

மறக்க முடியாது வருசம். வருசத்துக்கு 2 இல்லாட்டி 3னு சரக்கு அடிச்சுட்டு இருந்த காலம் போய் கிடைக்கும் போது எல்லாம் சரக்கு அடிக்க ஆரம்பிச்ச வருசம். நீண்ட நாள் கழித்து Place ஆன நண்பன் வைத்த பார்ட்டி வரலாறு காணாத ஒன்று. இது வரை CSE தனியா IT தனியா சரக்கு அடித்த பழக்கம் போய் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று கூடி ஒற்றுமைக்கு பிள்ளையார் சுழி போட்டது என்றால் அது மிகையாகாது. என் போன்ற ஸைட் டிஸ் வாசிகளும் வருத்த படாமல் இருக்க தந்தூரி சிக்கன் எல்லாம் வாங்கி வந்தது தனி சிறப்பு.. சில புது முகங்களும் அறிமுகம் ஆனது அதில் தான்.

நினைவில் நின்றவை

  • குடிமகன்களுக்கு சரக்கு அடிக்கும் போது இன்பம் என்றால், எங்களுக்கு சரக்கு முடிந்தவுடன் அவர்கள் ஆற்றும் சொற்பொழிவை கேட்பதில் கூடுதல் இன்பம். அதிலும் காமெடி நண்பரின் சொற்பொழிவு என்றால் கேட்கவே வேண்டாம். வீடியோ கேமரா சகிதம் கூட்டம் நிரம்பி விடும். அவர் பண்ணும் சேஷடை ரசிக்கும் படியாகவே இருக்கும். போதையின் உச்சத்தில் இருந்தாலும் குறிப்பிட்ட பெயரை சொன்னவுடன் வெட்கததில் சிரிக்கும் அந்த சிரிப்பு ,, மற்றவர்களை உதைப்பதற்கு காலைத் தூக்கி தானே கீழே விழும் புத்திசாலித்தனம்,, எவளோ தான் அடிச்சாலும் காலைல டான்னு 6.30கு எல்லாம் எந்திரிச்சுருவார்.. உச்சக்கட்ட போதையில் இருந்த போதும் தெளிவாக வாக்குமூலம் கொடுத்தது மட்டும் இல்லாமல் "மாற்றான் மனைவி மன்றத்து குமரி" என்று வீர வசனம் பேசியவர். இதுவரைக்கும் இவர் ஆம்லெட் போட்டு நான் பார்த்தது இல்லை..

  • சரக்கு அடித்தவுடன் எப்படிதான் தோனும்னு தெரியாது, கரெக்ட்ஆ பாட்டு நண்பரின் ரூம் கதவ தட்திடுவாங்க. ஒரு தடவை தான் னு நெனச்சு அவரும் பாட, அதுவே பழக்கம் ஆனது தான் மிச்சம்.. பாட்டு நண்பர் தன்னால் முடிந்த அளவு மிரட்டியும், கெஞ்சியும் கடைசியாக அழுதும் பார்த்த பிறகு தான் விட்டு இருக்கிறார்கள்.

  • இடியே விழுந்தாலும் பியர் தவிர வேற எதையும் தொட மாட்டேன்னு ஒரு கூட்டம் இருக்கும்.. அவர்கள் எதனால இந்த முடிவுக்கு வராங்கன்னு தெளிவா தெரியல. கடைசியா பியர் நண்பர் 2 பாடல் பியர் உள்ள தள்ளி 2 நாலா அவதி பட்டு இனிமேல் பியர் அடிக்க மாட்டேன்ங்கற முடிவுக்கு வந்ததா ஞாபகம்.

  • ஸ்டெப் நண்பர் மத்தவுங்க காசுல தான் சரக்கு அடிக்கணும்னு ஒரு கொள்கையோட வாழ்பவர். இது நாள் வரை பாட்‌டம் ஸிப் அடிப்பதாக சொல்லி வருகிறாரே தவிர அவருக்கு யாரும் பியர் வாங்கி தர முன்வருவதில்லை. :-)

  • CSE நண்பர்களான தமாசு போதையில் நாய்க்கு பொது மாத்து போட்ட நிகழ்வும் , மணல் நண்பர் பாத்‌ரூம் சென்று விட்டு அங்கயே தூங்கிவிட 2 மணி நேரம் கழித்து கண்டுபிடிக்க பட்டதும் இப்போதும் மறக்கமுடியாத ஒன்று.

  • கோவா சுற்றுலாவின் போது ஒரு ஸிப் பியர் சுவைத்து பார்த்து விட்டு, குற்ற உணர்ச்சியல் கூனி குறுகி இடிந்து போய் அமர்ந்த நண்பர் தற்போது வாரா வாரம் அடிச்சு தூள் கிளப்பரத்தா செய்தி.

இவளோ எழுதிட்டு, எங்கள் தல பரம குடி பத்தி எதுவும் எழுததாட்டி தல கோச்சிகுவார்.. இருந்தாலும் தவறாக எழுதி விட்டால் "அட்சு மூஞ்ச ஒடசுடுவார்" ங்கற காரணத்தால் இதோட முடிச்சுகிறேன்.

நன்றி,
பிரேம்.
Read more ...
Many say writing is an art. But for those who do/did Engineering writing is always fun. Semester is all about learning how to write rather than what to write. It gives you confidence to write anything out of nothing. You get to see different people using different techniques to score marks with the default being using Black stick + Handwriting + 30 pages of writing.


This post showcases few techniques used by my friends who made engineering writing easy for me.

DISCLAIMER : Trying out the mentioned methods may/may not work out in all colleges.

1. Seek Time Algorithm :

Simple and straight forward. This algorithm states that, "Don't see the question papers as a paper containing set of questions, its just a set of statements in English to which all rules of grammar are applicable".

It is up to you to derive the answers from the question. There are many variations of this algorithm, but as per the developer's suggestion active to passive voice conversion yields better results. Below is the real implementation of this for a 2 mark question which got complete 2 marks.

Q : What is Seek Time ?

A: The time required to seek is called Seek Time.

Q: What is one transaction ?

A: The difference between two transaction is called one transaction.

2. Padatha Podu Peter ah vidu :

As you can guess from the name , the talent lies in the way how you present it. For starters who doesn't know this, just memorize all the diagrams in the chapter and the rest of the answer is left to your imagination.

Little intro about someone who is extremely talented at this. Jeya Kumar , someone who never studies but scores always above 80 percent. It was misunderstood that he was a good listener in class. The truth was uncovered in 3rd year during one of the story telling sessions where Mr.Jeya Kumar was trying to explain the OS concept of Tunneling.

[Jai if you are reading this, I googled a lot to get this picture]

Just imagine how would it be on the previous day of exam, with a lot of portions left to cover, trusting somone like Jai would help covering a few topics, he explains the following

"Diagram ah podu machan, Car varuthu, Thannikulla poguthu, Thannila irunthu veliya vanthuruchu, Ullara ethachum eluthiko"

["Draw the diagram machi, Car comes, enters the water, comes out of the water, write something along with this"]

To the worst he is named the only padikara pullai of our class.

3. Wall Following Method:

One of the weirdest method I have ever witnessed. Balaji is the only one who has this unique talent or should I say behavior, during semesters. He chooses a wall, preferably the one close to him, makes sure he gets his position right, then starts turning the pages to the speed of the wind. Anyone who enters the room can find him in the same position at anytime. Too much of disturbances, he chooses some other wall to follow in some other room. Weird isn't? But still he tops in semesters and hence this method works.

4. Convince or confuse:

We call it the GOD FATHER technique, unanimously the best.
Given a question, there might be three possible scenarios

1. You know the question & answer.
2. You know the question but not the answer.
3. You don't know both.


But people gifted with this talent doesn't care about the above. All they need is a few words to play with. You start filling up the paper with most confusing words accompanied by convincing handwriting. Answers with a bad handwriting is just like T.R with his African music. People with this talent can write scalable answers, ranging from a single page till entire sheet.

P.S : Thanks to Balaji for bringing the unit test papers to hostel, without which this post wouldn't have been possible at all. Also to Gokul, the only person to have a digicam so that the pics are of better quality.

Cheers,
Prem.

Read more ...